Lilypie

Sunday, December 27, 2009

சௌதியில் வாழும் மக்களுக்கோர் நற்செய்தி


அரப்நியூஸ் செய்திதாளில் வந்ததை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். இதுகுறித்த சந்தேகங்களுக்கு பின்னூட்டத்தில் பதில் அளிக்கிறேன்.

Family visa now linked with salary
P.K. Abdul Ghafour | Arab News

JEDDAH: The Foreign Ministry will issue permanent resident visas for wives and children of expatriate workers in the Kingdom, without considering their profession, Al-Yaum Arabic daily has reported.

“The ministry’s office in Riyadh issued such recruitment visas for three days last week and stopped it temporarily. It is expected that the ministry would resume the service next month,” a ministry source told the paper.

The news is a relief for many of the seven million expatriate workers, who are unable to bring their families on resident visas due to their profession written on their iqamas.

The Foreign Ministry and the Recruitment Office only issued permanent resident and visit visas to those in white-collar jobs such as engineers, doctors and executives. The Al-Yaum report said the ministry would only look at the financial status of the applicant. “The family visa is no more linked with profession,” the source said. He said the ministry stopped processing applications in order to implement the new criteria. “This is a great news for thousands of professionals like me who are unable to bring their wives and children to the Kingdom because of the profession in iqama,” said Shabeer Ali, a computer engineer based in Jeddah.

Ali said he has been trying to bring his family to the Kingdom ever since his marriage. “Until now I could not, because they look at the profession on my iqama, which is an electrician. I had presented my Masters degree certificate in computer science attested by the Saudi Embassy, as well as my salary certificate, but they rejected my application,” he said.

He said he had never known about this problem before coming to the Kingdom.

“I know that there are thousands of expatriate workers who are highly qualified and earn good salaries but cannot bring their families because of their profession. I take this opportunity to thank the Saudi government for changing this policy and consider it a great blessing from God.” The Arabic daily said the ministry’s branches in Jeddah and Dammam have not implemented the new system as they have not been informed about the changed criteria.

Over the past three weeks, the ministry’s Riyadh office was issuing visit visas to all expatriate workers for their families without considering their profession.

K.C.M. Abdullah, a freelance journalist based in Riyadh, told Arab News that hundreds of people, including laborers, farmers and construction workers had benefited.

“Now they have stopped issuing visas to drivers and other house servants,” he pointed out. Some people claimed the visa rules were relaxed to mark the return of Crown Prince Sultan to the Kingdom after a yearlong medical trip.

Abdullah said the ministry used to accept around 800 applicants daily, adding over 1,000 people stood in the queue from early in the morning to present their applications made through the ministry’s website.

He said the revised service started a week before the Eid Al-Adha holidays.

After hearing the news of the relaxation in visa rules a large number of Indian workers approached the Indian Embassy in Riyadh and consulate in Jeddah to include names of their spouses in their passports.

Indian missions are now issuing new passports after including spouse names. People who want to include the names of spouses should attach attested marriage certificates. Those who have married recently should register their marriages by producing relevant documents.


அரப்நியூஸில் வாசிக்க

மேலும் விவரங்களுக்கு

சௌதியில் வேலை செய்யும் மக்களுக்காகவே அத்தனை விஷயங்களையும் மிகச்சிறப்பாக எழுதிவரும் நண்பர் திரு ராஜூ அவர்களின் இந்த தளத்தையும் மறக்காமல் பாருங்கள்.

Thursday, December 17, 2009

போடி!!!


நேற்றைய
கடைசி முத்தமும்
இன்றைய
முதல் முத்தமும்
சந்திக்கும்வரை
கட்டியவள் நீ
கட்டிவிட்ட கைக்கடிகாரம்
சொல்லாமல் சொன்னது
நொடிக்கொருதரம்
இறக்கவும்
பிறக்கவும்
காதல் போதுமென்று

பைங்கிளியே
பாரிஜாதமே
என்றேன்
பைத்தியமென்கிறாய்
போடி என்றேன்
பைத்தியமாகிறாய்

பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய்
வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல்

 

டிஸ்கி: புரியுறமாதிரி எழுதுன்னு மிரட்டிய தமிழரசிக்காக 

Sunday, December 6, 2009

ப்ரியம் சுழித்தோடும் வெளி


சொற்கள் புசிக்கும் வன்மௌனம்
ப்ரியத்தின் வேரில் தழையுரம்

மாறுதிசை மின்னோட்ட அதிர்வெண்ணாய்
நேசமும் நேசக்கோபமும்

வார்த்தைகள் தீராத வாதத்தின்
உலோகக்கரத்தில் சிக்கியும் இதழ்
பிரியும் ப்ரியத்தின் புன்னகை

தவறி விழும் ஒற்றைச்சொல்லில்
ரணத்தின் எடை இலக்க உயர்தலில்

நேசத்திடம் தோற்கையில்
யார் வெற்றிபெற்றவன்?
நான் தோற்கத் தயார்

குறிப்பு : (இதுஉரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).

Monday, November 9, 2009

யாளி


விளங்க கூடவில்லை
வெறும் வரியாகத் தான் இருந்தன
அகம் மற்றும் புறம் பற்றிப்பேசிய
நூறுகள் பதின்பருவத்து பள்ளி அறைகளில்

வாயில் அமுதும் வாலில் விஷமும்
பிரிவின் முத்தங்கள் குறித்த நினைவு மிருகம்

சருமம் துளைத்து உயிரின் நிலவறை
வரை நாவின் ஈரம் படர்த்திப் போகிறது
பசலை எனும் யாளி

ஆணுக்கும் உண்டு ஆள்தின்னும் பசலை

Wednesday, November 4, 2009

பிடித்ததும் பிடிக்காததும்

ஆஃபீஸ்ல வேலை இல்லாமல், வியாபாரம் இல்லாமல் (என்னைமாதிரி) ஈ அடிச்சுகிட்டு இருந்தீங்கன்னா அதுக்கடுத்து என்ன செய்யலாம். இதோ சில பொழுதுபோக்கு உங்களுக்காக (மெயிலில் வந்தது).









இனி மேட்டரே இல்லாத விஷயத்துக்கு வருவோம்

மாட்டிவிட்ட
அ.மு.செ.
வுக்கு நன்றி

அரசியல்வாதி

பிடித்தவர்:
மு.க. ஸ்டாலின்
பிடிக்காதவர்:
ராமதாஸ்

நடிகர்

பிடித்தவர்:
என்றும் பத்மஸ்ரீ கமல்
பிடிக்காதவர்:
விஷால்

நடிகை

பிடித்தவர்:
ரேவதி
பிடிக்காதவர்:
மீனா

வசனகர்த்தா

பிடித்தவர்:
சுஜாதா
பிடிக்காதவர்:
டி.ராஜேந்தர்

கவிஞர்(கள்)

பிடித்தவர்(கள்):
பா.ரா. , நேசமித்ரன் மற்றும் பாலமுருகன்
பிடிக்காதவர்: அப்படி யாருமில்லை

எழுத்தாளர்

பிடித்தவர்:
பாலகுமாரன்
பிடிக்காதவர்:
யாருமில்லை

இசையமைப்பாளர்

பிடித்தவர்:
ஏ.ஆர். ரஹ்மான்
பிடிக்காதவர்:
தேவா

திரைப்பட இயக்குனர்

பிடித்தவர்:
”மொழி” இராதாமோகன்
பிடிக்காதவர்:
பி.வாசு

பாடகர்

பிடித்தவர்:
ஹரிஹரன்
பிடிக்காதவர்:
நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்)

ரூல்ஸ்படி ரெண்டு, மூனு பேரையாவது மாட்டிவிடனுமே!!

வாங்க மக்கா

நட்புடன் (காணாமல்போன) ஜமால்

ஷஃபிக்ஸ்

தமிழரசி

பா.ரா








Saturday, October 17, 2009

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

diwali lamps

Monday, October 5, 2009

இளநிலைப்பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் உதவித்தொகை அறிவிப்பு பகிர்வு


உதவித்தொகை அறிவிப்பு


இந்திய ரிசர்வ் வங்கி, 150 இளநிலைப் பட்டதாரிகளுக்கான தனது உதவித்தொகையினைப் பற்றிய அறிவிப்பினை கீழ்க்கண்ட இணையதளத்தினில் வெளியிட்டள்ளது.
Website: www.rbi.org.in/youngscholars.aspx


ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 21.10.2009
Selection test for the RBI young scholars’ award will be held on January 10,2010.


இளநிலை பட்டதாரிகள் எந்த துறையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 18 முதல் 23 .
இது 5 அக்டோபர் தேதி இட்ட ஹிந்து நாளிதழிலும் வெளிவந்தது உள்ளது.
நன்றி : தி hindu .


வேலைவாய்ப்பு:
2008 - 2009ல் பி.ஈ, பி.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி படித்த பட்டதாரிகளுக்கு ஃபோர்டு நிறுவனம் தனது வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.
www.india.ford.com/careers


மேலதிக தகவலுக்கு கீழே இருக்கும் படத்தினை கிளிக்கி பெரிதாக்கி விபரம் அறிந்துகொள்ளவும்.




Monday, September 28, 2009

வன்முறை





அன்று
துணைவேண்டும் இரவு
அடிபடிந்து நீ
என்னிடம்
கர்வம் பூணும்
புன்னகையுடன்
நான்

இன்று
தடித்த இருளின்
போர்வை கிழித்து
உன் மீது
தடுக்கி விழும்
என் தொடுதலில்
தளர்ந்து சரிகிறது
தொடவியலாத
உன் தனிமை

என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள்

Thursday, September 10, 2009

தேவதையின் வரங்கள்......


தேவதையே!!

நண்பர் வசந்த் அனுப்பினார் என்ற ஒரே காரணத்துக்காக வேறு வழியில்லாமல் இங்கு வந்திருப்பது எனக்கும் புரிகிறது. தேவதையானால் என்ன. ஹ்ம்ம் விதி யாரை விட்டது. ஆறு மாசம் முன்னாடி காணாமல் போன உங்க அக்கா தேவதையைப் பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் சுத்திகிட்டு இருக்கே நீ. உங்க அக்கா வரம் கொடுக்கப் போனப்போ என்ன நடந்ததுன்னு
தெரியுமா உனக்கு? நீ எனக்கு வரம் தரும் முன் அந்த கதையை சொல்றேன் கேள். இது உன்னை உஷார் படுத்தத்தான். கேட்டுக்கோ.

'சிரிண்டா'! வீட்டிலிருந்தாலும் ஆஃபிஸிலிருந்தாலும் பெட்டிக்கடைக்குப் , போனாலும் ரெஸ்டாரெண்டுக்குப் போனாலும் எங்கேயும் எப்போதும் சிரிண்டாவைத்தான் வாங்கிக் குடிப்பார் அந்த ந(ண்)பர்.

ஒரு நாள். ரெஸ்டாரெண்டில் அமர்ந்து சிரிண்டாவை துளி, துளியாக உறிஞ்சிக் கொண்டே, "பாட்டிலில் சிரிண்டா குறையக் குறைய தீர்ந்துபோகாமல் மறுபடியும் மறுபடியும் வந்துகொண்டே இருந்தால், நன்றாக இருக்குமே" என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார் அந்த நபர்.

அடுத்த நொடி. படக் என்று சத்தம். பளிச் என்று வெளிச்சம். உங்க அக்கா அந்த நபரின் முன்னே தோன்றிவிட்டாள்.

"ஓ மனிதா... நீ நினைத்ததுபோலவே உனக்கு பாட்டிலில் சிரிண்டா வந்து கொண்டேயிருக்க அருள் புரிந்தோம். உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன். இன்னும் இரண்டு வரங்கள் என்ன வேண்டும்? கேள்" என்றாள் அக்கா தேவதை.

"தேவதையே, சற்று பொறு" என்று கூறிவிட்டு, சிரிண்டாவை முழுவதும் காலி செய்துவிட்டு பாட்டிலை மேஜையில் வைத்தார் அந்த நபர். திரும்பவும் பாட்டிலில் சிரிண்டா முழுமையாக நிரம்பிவிட்டது.

"ஓ சூப்பர் தேவதையே, சூப்பர், சூப்பர்" என்று உங்க அக்காவைப் பாராட்டிவிட்டு, 'இன்னும் இரண்டு வரங்கள் இருக்கின்றன' என்று மனதில் யோசித்த அந்த நபர் உடனே வாயைத் திறந்து கேட்டார், "இதுபோலவே இன்னும் இரண்டு சிரிண்டா பாட்டில் வேண்டும்" என்று. உங்க அக்கா அப்ப ஷாக்க்க்க்கானவள்தான், இன்னமும் அங்கேயேதான் அசந்துபோயி நிக்கிறாளாம்.

தேவதையே!!

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். நான் என்னோட பத்தை கேக்கட்டுமா என்றது தான் தாமதம் மூனுக்கே மூச்சில்லாம நிக்கும்போது பத்தா, போடா ங்கொய்யால உனக்கு ஒன்னும் வேணாம், நான் வேற எங்க போகணும் அத மட்டும் சொல்லு என்று கடுப்பாகிப் போனதால் நான் உங்க அட்ரஸ் மட்டும் கொடுத்து அனுப்பிட்டேன்.

பா. ராஜாராம்

பாலமுருகன்

”தல” ஜீவன்

சகோதரி சுமஜ்லா

போற வழியில் போன் போட்டு போனாப்போகுதுன்னு ஒரு வரம் தருகிறேன் வேண்டும் என்றால் கேள் என்று சொன்னதால் இதை மட்டும் கேட்டேன்.


ஒரு அறிஞன் சொன்னது போல்,

"மிகச் சிறந்த வருடங்களை நான் செலவிட்டது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோதுதான், ஆனால், அந்த பெண் என் மனைவி அல்ல"

"அந்த பெண் வேறு யாருமல்ல. என் அன்னை தான்"

அதனால்,

முதல்

வரை

எனக்கு என் பெற்றோர்கள் மீண்டும் வேண்டும். அவர்கள் அரவணைப்பில் இருப்பதற்கு அல்ல. என் அரவணைப்பில் அவர்களை வைத்துக்கொள்ள.

Sunday, September 6, 2009

என் தமிழ்


தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!

மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!

இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா..' என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்


(எழுதியவர்: திரு. பழனி,  இது அவரின் வலைப்பூ.)

Monday, August 31, 2009

“இந்தியாவில் வறுமைக் கோடு” - பகுதி - 2

விவசாயியின் வருமான உயர்வுக்கும், விவசாய இடுபொருள் உயர்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவனது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போயுள்ளதுதான் தெரிகிறது. அதாவது அவனது வருமான உயர்வு என்பது, அவனது வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்ததுடன் ஒப்பிட்டால் அதிக இழப்பில்தான் செல்லும் என்பதுதான் இதன் அர்த்தம். அப்படியில்லையென்றால் ஏன் தற்கொலை நடக்கிறது, அதுவும் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும்.

(அதிர்ச்சிகள் தொடரும்)


பகுதி - 1

******************************************
விவசாயிகள் மட்டுமல்ல, உத்திரவாதமான வேலையில்லாமல் நகரத்தில் அமைப்பு சார்ந்த தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரமும் சரிகிறது (உதாரணம், அசோக் லேலாண்ட். இங்கு உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது ஆனால் அதே நேரத்தில் நிரந்தர ஊழியர்கள் பல மடங்கு குறைக்கப்பட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர். அதுவும் குறைந்த எண்ணிக்கையில். ஆக உற்பத்தி அதிகரித்துள்ளது ஆனால் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது). இதே நேரத்தில் சிறு தொழில், சில்லறை வணிகம் போன்ற அதிக வேலை வாய்ப்பு தரும் (விவசாயத்தை அடுத்து) துறைகள் வீழ்ந்து வருகின்றன.

அதுமட்டுமா, உதிரிப் பாட்டாளி எனும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மிக அதிகமாக உருவாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த அடிப்படை உரிமைகளும் கிடையாது. (கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ, கால் டாக்ஸி, நகர சுத்திகரிப்பு மற்ற பிற சேவை வழங்கும் துறைகளில்). இவர்களின் சம்பளம் ஐயோ பாவம் கேட்கவே வேண்டாம், எந்த உரிமைகளும் சலுகைகளும் கிடையாது.

இதே நேரத்தில் மிக குறைவான சதவீதமுள்ள ஒரு வர்க்கம் (தகவல் தொழில் நுட்ப தொழிலாளர்கள் போன்று) உருவாக்கும் மூலதன சுழற்சி விலைவாசியை ஊதிப் பெருக்குகிறது. இதனால் அடிப்படை தேவைகளான மருத்துவ வசதி, தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து ஆகியவை சாதரண ஏழை மக்களின் கைகளிலிருந்து நழுவிச் செல்கிறது. விலை உயர்வு, செயற்கையாக உருவாக்கப்படும் தட்டுப்பாடுகள், மருத்துவம், கல்வி. இதெல்லாம்  மறுக்க முடியாத உண்மைகள்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் சரி. வறுமைக்கோடு என்றால் என்ன? அதன் அளவீடு என்ன?

Average earning of an Indian - US$ 440 per year or about (This is based on a GDP of US$ 440 billion and 1 billion people)

Approximately Rs. 1,760/per month/ **

அதிகபட்சம் 2,000/- ரூபாய் என்றே வைத்துக்கொள்வோம், இதை வைத்து என்ன செய்ய முடியும்?

The World Bank's definition of the poverty line, for under developed countries, like India, is US$ 1/day/person or US $365 per year. As per this definition, more than 75% of all Indians are, probably, below the poverty line!

இதன்படி நகரங்களில் ஒரு மாதத்துக்கு 1,440/- ரூபாய், அதாவது ஒரு நாளைக்கு 48 ரூபாய் சம்பாதித்தால் போதும் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளதாக அர்த்தம். அப்படிப் பார்த்தால் பெரும்பாலான பிச்சைக்காரர்கள் கூட இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள்தான். இதே விசயம் கிராமப் புறங்களில் 1,500/- ரூபாய்.

வறுமைக் கோடு என்பதற்கு அரசு என்ன சொல்கிறது?

இங்கே படியுங்கள்

"The official estimates of the poverty line are based on a norm of 2400 calories per capita per day for rural areas and 2100 per capita per day for urban areas." This goes back to the 1970s; at that time, we decided to measure poverty levels by considering a minimum nutritional level. More accurately, the measure was the amount of money required to buy food equivalent to this nutritional level. If you earned more than this amount, you were above the poverty line"

பெரிய மனுஷங்க என்ன சொல்ராங்கன்னா, 2400 கலோரி சத்துள்ள உணவு வாங்கும் அளவு ஒருவர் சம்பாதித்தால் போதும் அவர் வறுமைக் கோட்டிற்கு மேலுள்ளவர். இந்தியாவில் வறுமை மிக வித்தியாசமான முறையில் வரையறுக்கப்படுகிறது. அதன்படி ஒருவரது தனி நபர் வருமானம் 2400 கலோரி மதிப்புள்ள உணவை வாங்கும் அளவு இருந்தால் அவர் ஏழையல்ல. ஒருவர் என்ன சம்பாதிக்கிறார் என்பதுதான் முக்கியத்துவம் பெறுகிறதே ஒழிய, அவரால் உணவை வாங்க முடிகிறதா என்பது கவனம் பெறவில்லை. அரசு இப்போது அதனையும் 2100 கலோரி என்று குறைத்துவிட்டது.


இந்திய அரசியல் சாசனம் நீதியை வலியுறுத்தும் கருத்துகளை அழகான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறது. அந்தப் பார்வையில் அரசுதான் மக்களுக்கு வீடு, சுகாதாரம், கல்வி,... உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இந்த கடமையை அரசு நிறைவேற்றுகிறது என்ற ஊகத்தின் அடிப்படையில் நினைத்துக் கொள்ளப்படுகிறது.


இதெல்லாம் கிடைத்து விடுகிறது என்ற ஊகத்தால், உணவுப் பொருள் வாங்க மட்டுமே ஒருவர் சம்பாதிக்கிறார் என்றும், உணவுப் பொருள் வாங்கத் தேவையான பணத்தை ஒருவர் சம்பாதிக்கவில்லை என்றால் ஏழை என்றும் வரையறுக்கப்படுகிறது. ஆனால் உண்மை நிலை என்ன, ஒருவரது சம்பளத்தில் பெரும் பகுதி அரசு வழங்க வேண்டிய விஷயங்களுக்காக செலவிடப்பட்டு விடுகிறது. அரசு கடமையை நிறைவேற்றாத நிலையிலும், ஏழ்மை தொடர்பான பழைய வரையறை இன்னமும் ஏன் பின்பற்றப்படுகிறது?

ஏழ்மையை அகற்ற செயல்படுத்தப்படும் அரசு செயல் திட்டங்கள் மனம் போன போக்கில் உள்ளன. உதாரணம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோர் என்று ஒழுங்கற்ற முறையில் ஏழைகள் பிரிக்கப்படுகின்றனர். நல உதவிகள் வழங்குவதும் மனம் போன போக்கில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வீட்டு வேலை செய்யும் பெண் கூட இதைவிட பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பார். அவரது குடும்பம் கூட வறுமையான குடும்பம், ஆனால் அரசு புள்ளி விவரப்படி அவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வரமாட்டார். ஆக, இது போதுமே அரசின் போலியான வரையறையை வெளிச்சம் போட்டுக் காட்ட. அரசு அந்த பாத்திரம் கழுவும், தனது பிள்ளைகளை படிக்க வைக்க வழியின்றி வேலைக்கு அனுப்பும், அந்தப் பெண்ணைக் கூட வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர் என்று சொல்லும் நிலைதான் உருவாகிறது.

ஆண்டு தோறும் ஏற்படும் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய தேவைகளான இருப்பிடம், உடை, கல்வி, மருத்துவம், போக்குவரத்து இவற்றின் விலை உயர்வு தட்டுப்பாடு, இவற்றை அடிப்படையாகக் கொண்டு வறுமைக் கோடு தீர்மாணிக்கப்படவில்லை. பிறகு எப்படி இந்த தகவல் சரியானதாக இருக்கும்.

ஏழைகளின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் எந்த அரசும் எந்தக் காலத்திலும் அனுமதி கேட்டதில்லை. கிராமப்புற ஏழைகளின் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எந்த பரிசோதனையும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அதே நேரம், முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் பாதி கடனை வாங்கியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஏழைகள் அல்ல. அப்படியானால் ஏழைகள் யார். 40% நிலமற்ற விவசாய தொழிலாளர்கள். 45% சிறு மற்றும் குறு விவசாயிகள். அவர்கள்தான் உணவு தானியங்களை வாங்குகிறார்கள். 7.5% பேர் கிராமப்புற கைவினை கலைஞர்கள். எஞ்சியவர்கள் எல்லாம் மற்றவர்கள்தான். 85% ஏழைகளுக்கு நேரடியாக நிலப் பிரச்சினை உள்ளது. அரசின் செயல்திட்டத்தில் இந்தப் பிரச்சினை எந்தக்காலத்திலும் இடம்பிடிக்கவில்லை. கிராமப்புற கைவினை கலைஞர்கள்கூட நிலமின்றியே இருக்கின்றனர்.

வளர்ந்த வல்லரசு நாடுகளில் வங்கிகள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், அன்னிய தொழில் கூடங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டுடைமையாகின்றன. இங்கே நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப்பதற்கு யோசித்து வருகிறார்கள். அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் நாளுக்கு ஒன்றாக நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கின்ற தனியார் துறையை எப்படிக் காப்பது என்று அங்கே (அடுத்தவர்) தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே தனியார் துறைதான் மாமருந்து என்று நம்மவர்களின் கணிப்பு.

இதில் விஷேசம் என்னவென்றால் 1977 லிருந்து 1987 வரையான வருடங்களில் தான் வறுமை மிக கடுமையாக குறைந்துள்ளது (அந்த போலி வரையறைப்படி). உறுதியாக இந்த வருடங்களில் உலகமய, தாராளமய கொள்கைகள் இந்தியாவுக்குள் வரவில்லை. இதில் ப்ளானிங் கமிசன் 19% வறுமைக் கோடுக்கு கீழே என்கிறது, தேசிய கணக்கீட்டு நிறுவனம் (NSS) 36% என்கிறது. ஆக , இவர்களின் விளக்கமும், புள்ளிவிவரமும் உரிக்க உரிக்க வெங்காயம் கதைதான்.

அட போங்கப்பா!




Saturday, August 29, 2009

“இந்தியாவில் வறுமைக் கோடு”

வள்ளல்பிரான் கூறினார்.

நான் தேசப் படத்திலே தேடிப் பார்த்தேன்
தீர்க்க ரேகைக் கோடு இருந்தது அட்ச ரேகைக் கோடு இருந்தது

பிடி சங்கிலி போட்ட பெண்பிள்ளை அரசு இலவச டீவி தூக்கி ஆட்டோ ஏறும் போதும், தீப்பெட்டி அளவுக்கு மோதிரம் போட்ட ஆள் அரசு டீவியை பைக்கிலே கட்டும் போதும் கொழுத்த பணக்காரன் விவசாயக் கடன் தள்ளுபடி பெறும் போதும் . . .

அண்ணாந்து பார்த்தேன்
அவர்கள் தலைக்கு மேலே தெரிந்தது
தேடிய கோடு அரசு அடிக்கடி சொல்லுமே அந்த வறுமைக் கோடு!

நிசமாலுமே எங்கே இருக்கிறது அது எனப் பார்த்தால் வாடிய ஏழையின் வயிற்று மடிப்பிலே வருத்தமே வடிவான அவன் முக வரிகளிலே இருந்தது !

தலை நகரின் பிளாட்பாரத்தில்
பொத்தல் போர்வைக்குள் ஆயிரம் சோதி இலவசதரிசனம் கண்டும் அந்த ஏழைகள் வீடு பேற்றைக் அறியாதவர்கள்

***************************************

தீக்குள் விரலை வைத்தால் என்னாகும் என்று பாரதியையே ஒரு வழி செய்துவிட்டு, என்னையும் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச்சொல்லி தோழி தமிழரசி கொடுத்த அன்புக்கட்டளையின் வினையால் வந்த வினை. அவர் எனக்கு கொடுத்த தலைப்பு “இந்தியாவின் நேற்றைய இன்றைய நாளைய வறுமைக்கோட்டின் நிலை”

இதில் ஒரு சிறிய மாற்றத்துடன் “இந்தியாவில் வறுமைக் கோடு” என்ற பொதுவான தலைப்பில் எழுதுகின்றேன். நான் இந்த தலைப்பில் பெரும்பாலும் விவசாயிகளைப் பற்றியே சொல்லப் போகிறேன்.

அதற்கு முன்பாக சில புள்ளி விவரம்.

ஜூலை மாதம் – 36 பேர்
கடந்த 5 வருடத்தில் – 6000 பேர்
கடந்த 20 வருடத்தில் – 186,000 பேர்.

இதெல்லாம் பசுமைப் புரட்சிக்குப் பிறகு வருமானம் குரைவால் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை..

நமது இந்திய தேசத்தில் தொழில் துறை எவ்வளவோ முன்னேற்றம் கண்டிருக்கிறது. அதனால் அரசு அறிக்கையின்படி வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்போது எப்படி அவர்கள் வருமானம் குறைகிறது என்று சொல்ல முடியும்?

விவசாயிகள் வருமானம் குறையவில்லை, அதிகரித்தது. அதே சமயம் மற்ற துறையினரின் வருமானம் விவசாயிகளை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. கணினித் தொழிலாளி விவசாயியை விட அதிகம் தான் சம்பாதிப்பான். அதனால் விவசாயி ஏழையாவதில்லை. விவசாயிக்கும் வருமானம் அதிகரிக்கும், ஆனால் கணினித் தொழிலாளியை விட குறைவாக அதிகரிக்கும்.

இந்த இடத்தில் தான் அரசின் புள்ளி விவரம் முரண்படுவதையும், அதிலிருந்து பெறும் உண்மைகளையும் நாம் கவனிக்க முடியும். விவசாய இடுபொருள் வளர்ச்சி 100% அல்லது 200% மடங்கு உயர்ந்துள்ளது என்பது அரசாங்க புள்ளிவிவரம், வேறு சில NGO க்களின் புள்ளி விவரங்கள், இவற்றைத் தவிர்த்து நேரடியாக விவசாயிகள் பார்க்கும் விசயம் ஆகியன இதை உறுதிப்படுத்துகிறது.

அதே சமயம் விவசாய பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் விலை இரு மடங்கு குறைந்துள்ளது. ஆனால் விலைவாசி மிக அதிகமாகியுள்ளது. ஆக, இப்படி இந்தியாவின் 60% மேற்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை பல முனைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றது.

விவசாயியின் வருமான உயர்வுக்கும், விவசாய இடுபொருள் உயர்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவனது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போயுள்ளதுதான் தெரிகிறது. அதாவது அவனது வருமான உயர்வு என்பது, அவனது வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்ததுடன் ஒப்பிட்டால் அதிக இழப்பில்தான் செல்லும் என்பதுதான் இதன் அர்த்தம். அப்படியில்லையென்றால் ஏன் தற்கொலை நடக்கிறது, அதுவும் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும்.

(அதிர்ச்சிகள் தொடரும்)

 

Tuesday, August 4, 2009

ஸ்பரிசம்


ஜடத்திலிருந்து தோன்றி
ஜடத்திற்கு உயிர் தரும்
கலையில் ஒளிரும் உயிரம்சம்
மனித மனத்தை
ஸ்பரிசிக்கும்

ஸ்பரிசத்தின் பயணம்
காலத்தில் கலைக்கு வித்திடும்போது
கலை கலையாய் இல்லையேல்
அதுவும் ஜடமாய்

உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ
புரியாத ஸ்பரிசம் இது எனக்கு

உனது உயிரின் திரையை
திறந்து உடுத்தினேன்
உன்னை.
அது என்னுள்
இன்னும் நிர்வாணமாய்
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய்

S. A. Navas

Monday, July 27, 2009

ஹாலிவுட் நடிகைகள்- ஒப்பனை இல்லாமலும் ஒப்பனையுடனும்!!!



















(அதுக்கு இது எதிர் பதிவு இல்லை)


ஓரமாய் நின்று அவளின்
ஒரு கண் மட்டும் கண்டேன்
என்ன அழகு என்ன அழகு
பார்த்துக்கொண்டே இருந்தேன்
ஏதோ குறுகுறுக்க அவள்
மெல்ல என் பக்கம் திரும்பினாள்
என்ன ஆச்சரியம்
அவளின் மற்றொருகண்ணும்
என்னைப்போல்
அதையே பார்த்துக்கொண்டிருந்தது

என்றென்றும் நட்புடன் ஜமால்


இன்று மட்டுமல்ல என்றும்

உன் மீது படும் சூரியனின்
முதல் ஒளிக்கதிர் உன் முகத்தில் புன்னகையையும்

இரண்டாவது ஒளிக்கதிர் வாழ்வில் பிரகாசத்தையும்

மூன்றாவது ஒளிக்கதிர் நிலையான சந்தோசத்தையும்

நான்காவது ஒளிக்கதிர் நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும்

ஐந்தாவது................................ வேணாம்
இதுக்கு மேல பட்டா கறுத்து போயிடுவ.


இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

S. A. Navas

Sunday, July 19, 2009

விடை தெரிந்த புதிராய்


ஒரு கருப்பு நதியாய்
எங்கள் இரவும்,
குருட்டு ஊமையாய்
எங்களின் கனவும்.
ஆர்ப்பரிக்கும் மௌனமே
எங்கள் இசையுமாய்,

காலை வெயில் கடப்பது போலவே
எங்களின் எல்லா பண்டிகையும்,
மழை நீரும் நதி நீரும்
பிரித்தறியத் தெரியாத
உப்புக் கண்ணீரில் கடலாய் நாங்கள்

புதிது புதிதாய் பிறப்பது
எங்கள் வாழ்வில்
தூரங்கள் மட்டும்தான்.
சங்கடங்களும் கேள்விகளும்
அதன் பின்னால் அணிவகுத்து

எங்களின் ஆறுதலாய்
விரல் பிடித்து நடப்பது
உங்களின் நினைவுகள் தான்.

நாங்கள் மட்டும் இங்கே
சுருதியோடு பாடிக்கொண்டிருக்கிறோம்.
சேர்க்க வேண்டிய சில்லறைகளுக்காக,
எங்களவர்கள் யாருமில்லாத
இரயில் நிலையத்தில்

மெல்ல இரவு சாக,
மீண்டும்
வேலையின் புழுக்கத்தில்
புலம்ப நேரமின்றி
விடை தெரிந்த
புதிராய் நாங்கள்.


S.A. Navas.

நண்பர்களே இதையும் கொஞ்சம் படிங்க ப்ளீஸ்.

Tuesday, July 14, 2009

''சுவாரஸ்ய வலைப்பதிவு விருது''

சூடாகி இருந்த வலையுலகை சுவாரஸ்யப்படுத்தவும், நண்பர்களை உற்சாகப்படுத்தவும் திரு. செந்தழல் ரவி அவர்கள் இந்த விருதினை அறிமுக படுத்தி
அதை மகிழ்ச்சியோடு சிறந்த பதிவர்கள் ஆறு பேருக்கு வழங்கியும் இருக்கிறார் அவருக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்!



விருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும், மேலும்! இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டு வைக்கவேண்டும்!

திரு,செந்தழல் ரவி அவர்களிடம் விருதை பெற்ற அமிர்த வர்ஷினி அம்மா
,

எங்கள் தல 'ஜீவன்" அவர்களுக்கு வழங்க, அதை எனக்கும் வாரி வழங்கி இருக்கின்றார் நண்பர் ஜீவன். அவருக்கு என் நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.

ரொம்ப  நன்றி
“தல”

ரவி விதித்த அன்புக்கட்டளையின் படி நான் இந்த விருதினை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்!!

தலைப்பே சுவாரஸ்யம் பற்றி கூறுவதால், நான் சரியானவர்களைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். இவங்க கிட்ட நான் வாழ்த்துக்கள் பெறனும்னு ஆசைப்படும்போது நானே அவர்களுக்கு விருது கொடுப்பது கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது (ஒரே  நெர்வஸா இருக்கு). இருந்தாலும் இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் இவர்கள் என்பதால் இந்த விருதை கொடுக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாவும் இருக்கு.


அந்த ஆறுபேர்.......

கடல் புறா - பாலா

எழுத்தோசை - கவியரசி தமிழரசி

எங்க வீட்டு புறா – சக்தி

நகைச்சுவைக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத  - சோம்பேறி

சுவாரசியம் கொஞ்சமும் குறையாத நம்ம – வால் பையன்

நம்ம பிரியமுள்ள வசந்த்

இவர்கள் அனைவருமே நிச்சயமாக  சுவாரசியமான பதிவர்கள் என்பதால் விருது கொடுப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!


Wednesday, July 1, 2009

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதீங்க




















இது சும்மா, சத்தம் போடாம சிரிக்க

இருக்குற வேலையை விட்டுட்டு வேற வேலை தேடுபவன் மீன் மாதிரி.
அதே வேளையில் தொடரனும்னு நினைக்கிறவன் கல்லுகட்டிகிட்டவன் மாதிரி

Sunday, June 21, 2009

ரெண்டுக்கு - நான், மத்ததுக்கு - நீங்க

இந்த படையை பார்த்தால் பாம்பே நடுங்கும்


இதுக்குத்தான் ரொம்ப தலைக்கனம் கூடாதுங்கறது



























எல்லா படத்துக்கும் உங்க வித்தியாசமான கமெண்ட்ஸையும் பின்னூட்டத்தில் போடுங்களேன்
அப்படியே உங்க பொன்னான ஓட்டையும் போட்டுட்டு போங்க