சூடாகி இருந்த வலையுலகை சுவாரஸ்யப்படுத்தவும், நண்பர்களை உற்சாகப்படுத்தவும் திரு. செந்தழல் ரவி அவர்கள் இந்த விருதினை அறிமுக படுத்தி
அதை மகிழ்ச்சியோடு சிறந்த பதிவர்கள் ஆறு பேருக்கு வழங்கியும் இருக்கிறார் அவருக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்!
விருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும், மேலும்! இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டு வைக்கவேண்டும்!
திரு,செந்தழல் ரவி அவர்களிடம் விருதை பெற்ற அமிர்த வர்ஷினி அம்மா,
எங்கள் தல 'ஜீவன்" அவர்களுக்கு வழங்க, அதை எனக்கும் வாரி வழங்கி இருக்கின்றார் நண்பர் ஜீவன். அவருக்கு என் நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.
ரொம்ப நன்றி “தல”
ரவி விதித்த அன்புக்கட்டளையின் படி நான் இந்த விருதினை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்!!
தலைப்பே சுவாரஸ்யம் பற்றி கூறுவதால், நான் சரியானவர்களைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். இவங்க கிட்ட நான் வாழ்த்துக்கள் பெறனும்னு ஆசைப்படும்போது நானே அவர்களுக்கு விருது கொடுப்பது கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது (ஒரே நெர்வஸா இருக்கு). இருந்தாலும் இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் இவர்கள் என்பதால் இந்த விருதை கொடுக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாவும் இருக்கு.
அந்த ஆறுபேர்.......
கடல் புறா - பாலா
எழுத்தோசை - கவியரசி தமிழரசி
எங்க வீட்டு புறா – சக்தி
நகைச்சுவைக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத - சோம்பேறி
சுவாரசியம் கொஞ்சமும் குறையாத நம்ம – வால் பையன்
நம்ம பிரியமுள்ள வசந்த்
இவர்கள் அனைவருமே நிச்சயமாக சுவாரசியமான பதிவர்கள் என்பதால் விருது கொடுப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!