Lilypie

Monday, May 11, 2009

அதிர்ஷ்டம்



அதிகாலை 6 மணி, அரை எண் 13, சாவித்ரி சேரில் அமர்ந்தபடி மேஜையின் மேல் ஒருகை நீட்டி மற்றொரு கையை அதன் மேல் மடித்து தலையனையாக்கி அரை உறக்கத்தில் இருந்தாள்.

சாரதா ஆயா தரை முழுவதும் டெட்டால் கலந்த நீரால் துடைத்து விட்டு சென்று இருந்தாள். அதனால் ஆஸ்பத்திரி வாடை கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.

அடுத்த அறை வாசலில் யாரோ ஒரு சிறுவன் கையில் சில்வர் தூக்குடன் தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான் "அம்மா காப்பி வாங்கவா? டீ வாங்கவா?. அவன் அம்மா எதுவோ சொல்லி இருக்க வேண்டும். சில்லறையை பத்திரமா வாங்கிட்டு வாடா என்று சொன்னது மட்டும் கொஞ்சம் சத்தமாக காதில் விழுந்தது.

பெட்டில் வாசுதேவன் உறக்கத்தில் இருந்தான். உறக்கத்தில் என்று சொல்வதை விட உணர்வற்று கிடந்தான். ஏழு மாதங்கள் ஆகிவிட்டது இந்த மருத்துவமனையில் அனுமதித்து. "கோமா". அவளைத் தவிர வேறு யாரும் அவனுடன் இல்லை. இதுவரை யாரும் வந்து பார்க்கவும் இல்லை. அவன் நன்றாக இருந்தபோது ஆடிய ஆட்டம் அப்படி

நேற்று முன்தினம்தான் ஜெர்மனியில் இருந்து வந்த டாக்டர் உத்தரவாதம் கொடுத்து இருந்தார்.

கையில் ட்ரேயுடன் ஹெட் நர்ஸ் உள்ளே வந்தாள். சாவித்ரி இரவு முழுவதும் விழிப்பதும் உறங்குவதுமாய் இருந்தவள் அதிகாலையில் கொஞ்சம் கண் அயர்ந்து விட்டாள். பளிச்சென்று இருந்த நர்ஸ் தேவி, "என்னக்கா! இராத்திரி முழுவதும் தூங்கலையா? இராத்திரி ஏதாவது அசைவு தெரிந்ததா? என்று கேட்டாள்.

"இல்ல தேவி. ஒரு முறை கை அசைந்தது போல் இருந்தது. அது என்னோட பிரம்மையா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு" என்றாள்.
கவலைப்படாதீங்க அக்கா. அதான் சீப் டாக்டர் சொல்லிட்டாருல்ல, இன்னும் ரெண்டு மூணு நாளுக்குள்ள அவருக்கு நினைவு வந்துரும். ஏழு மாசமா நீங்க அவர்கூடவே இருக்கீங்க. இன்னும் ரெண்டு மூணு நாள்தானே. எல்லாம் சரியாகும். தைரியமா இருங்க.

தேவி சந்திரனின், தினமும் எடுக்கும் பல்ஸ், இரத்தகொதிப்பின் அளவு, எல்லாம் குறித்த பிறகு "நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வாரேன் அக்கா' என்று சொல்லிவிட்டு அடுத்த அறையை நோக்கி போனாள்.

தெர்மாசில் இருந்த காப்பியை கொஞ்சம் கப்பில் ஊற்றி ஜன்னல் வழியாக வெளியில் நோக்கினாள். ஆட்டோவில் யாரையோ கைப்பிடித்து உள்ளே ஒருவர் அமர்த்த, அதன் பின் அவரும் அமர ஆட்டோ நகரத்தொடங்கியது. யாரோ டிஸ்சார்ஜ் ஆகி போகின்றார். ஒரு சிறு பெருமூச்சு அவளுக்கும் வெளிப்பட்டது.

திடீரென அவள் சேலைத் தலைப்பை யாரோ இழுப்பது போல் இருக்க திரும்பியவள் சந்தோஷத்தில் அதிர்ந்து தான் போனாள். வாசுதான்! கண்களில் ஆறுபோல் நீர் வழிய ஏக்கத்தோடு அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் சந்தோஷத்தில் டாக்டரை அழைக்க அவன் கையை அசைத்து அவளை அருகில் அழைத்தான்.

மெல்ல அவன் கையை பிடித்து அவள் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய புன்னகை செய்தனர்.

வாசுவின் குரல் தளுதளுத்தது. "சாவித்ரி, நீ என்னோட வாழ்க்கைல எல்லா துக்கத்திலும் கூடவே இருந்திருக்க. என்னோட பாக்டரி தீப்பிடிச்சி எரிஞ்சு சாம்பல் ஆனப்போ நீ மட்டும் தான் கூட இருந்த. என்னோட தொழில்ல நஷ்டம் ஏற்பட்டப்போ நீ மட்டும்தான் எனக்கு ஆறுதலா இருந்தே. என்னோட தொழில் போட்டியினால் என் எதிரி என்னை சுட்டபோதும் கூட இருந்தது நீதான். என் வீடு, கார், வசதி அனைத்தையும் இழந்தபோதும் கடைசி வரைக்கும் கூட இருந்த தேவதை நீ. கடைசியா என் உடல்நிலை மோசமானபோதும் உன்னைத்தவிர வேறு யாரும் என்னுடன் இல்லை."

சாவித்ரி "அதெல்லாம் எதுக்கு இப்போ, விடுங்க, இப்போ நீங்க மீண்டு வந்ததே போதும்" என்றபோது சந்தோசம் பொங்கியது அவளுக்கு.



"இல்லை சாவித்ரி விஷயம் இருக்கு, இவ்வளவு விசயமும் நடந்தது நீ கூட இருக்கும்போது தான், I think You are my bad luck. அதுனால என் பொண்டாட்டிக்கு போன் போட்டுக் கொடு. அவள்கிட்ட பேசி மன்னிப்பு கேக்கணும்" என்றான்.



டிஸ்கி: முதல் முயற்சி, கொஞ்சமா நக்கல் அடிங்கப்பா!

83 comments:

ers said...

ஹெட்டர் படம் பட்டைய கிளப்புது

S.A. நவாஸுதீன் said...

நெல்லைத்தமிழ் said...

ஹெட்டர் படம் பட்டைய கிளப்புது

வாங்க நெல்லை

வேத்தியன் said...

கதை நல்லா இருக்கு நண்பரே...

கடைசியில கொடுத்த ட்விஸ்ட் கலக்கல்...

வாழ்த்துகள்...

அப்துல்மாலிக் said...

அது எப்படி ஆஸ்பத்திரி வாடையை அப்படியே கண்முன்னே கொண்டுவந்திருக்கே..இப்போதான் அனுபவிச்சிட்டு வந்திருக்கேன்.. ஹஹா
பட் இருந்தாலும் இங்கே அந்த டெட்டால் வாசம் எதுவுமே இல்லே, வீட்டைவிட நல்லாவே இருந்தது

அப்துல்மாலிக் said...

அழகான எழுத்தோட்டம் மாப்ஸ்.. கதையோடு கலக்க வெச்சிட்டே நல்ல முயற்சி

அப்துல்மாலிக் said...

//"இல்லை சாவித்ரி விஷயம் இருக்கு, இவ்வளவு விசயமும் நடந்தது நீ கூட இருக்கும்போது தான், I think You are my bad luck. அதுனால என் பொண்டாட்டிக்கு போன் போட்டுக் கொடு. அவள்கிட்ட பேசி மன்னிப்பு கேக்கணும்" என்றான்.
//
ஹா ஹா கதை அப்படி போகுதா... உனது வித்தியாசமான கதைக்களம் ரசித்தேன் மாப்ஸ்...............

அப்துல்மாலிக் said...

//டிஸ்கி: முதல் முயற்சி, கொஞ்சமா நக்கல் அடிங்கப்பா!
//
இது கலக்கல் நல்ல டிவிஸ்ட்

அப்துல்மாலிக் said...

பிளாக் டெம்லெட் சூப்பர்

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

அதுவும் அந்த கடைசி ட்விஸ்ட்... கலக்கல்.

// அரை எண் 13,//

அறை எண் 13...

அ.மு.செய்யது said...

வாவ் !!! இங்க ஒரு சிறுகதையா ??

எல்லாமே சொல்லி வச்ச மாதிரி பின்றீங்க..

இங்க காலையில 3 மணிக்கு, அபுஅஃப்ஸர்,அமித்து அம்மா,நவாஸ் ஆகிய மூன்று எழுத்தாளார்களின் ஆக்கங்களை படித்து விட்டேன்,

மனம் நிறைந்து விட்டது.

அ.மு.செய்யது said...

//சில்லறையை பத்திரமா வாங்கிட்டு வாடா என்று சொன்னது மட்டும் கொஞ்சம் சத்தமாக காதில் விழுந்தது.//

ரசிக்க வைத்த வரிகள்.

அ.மு.செய்யது said...

படிக்க எடுத்து கொள்ளும் நேரம் 3 அல்லது 4 நிமிடங்களாக இருந்தாலும் படித்து முடிக்கும் போது

வாசகனை "அட" போட வைக்கும் சிறுகதை.

புதியவன் said...

மருத்துவமனை காட்சிகள் விவரிக்கும் போது ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடை வந்திருக்கிறது நவாஸுதீன்...

புதியவன் said...

யதார்த்தமான கதை...எதிர்பாராத திருப்பத்தில் முடித்திருக்கும் விதம் கதை மேலும் சிறப்பு...

புதியவன் said...

//டிஸ்கி: முதல் முயற்சி, கொஞ்சமா நக்கல் அடிங்கப்பா!//

ரொம்ப நல்லா வந்திருக்கு இன்னும் நிறைய எழுதுங்கள்...வாழ்த்துக்கள் நவாஸூதீன்...

sakthi said...

I think You are my bad luck. அதுனால என் பொண்டாட்டிக்கு போன் போட்டுக் கொடு. அவள்கிட்ட பேசி மன்னிப்பு கேக்கணும்" என்றான்.

semma twist nga anna

sakthi said...

சாரதா ஆயா தரை முழுவதும் டெட்டால் கலந்த நீரால் துடைத்து விட்டு சென்று இருந்தாள். அதனால் ஆஸ்பத்திரி வாடை கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.

nalla hospital than polum

sakthi said...

மெல்ல அவன் கையை பிடித்து அவள் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய புன்னகை செய்தனர்.

enna oru pasam

sakthi said...

டிஸ்கி: முதல் முயற்சி, கொஞ்சமா நக்கல் அடிங்கப்பா!

summave en comments appadithan eruku nu solranga ithula vera neenga extra ketkaringa

sakthi said...

அ.மு.செய்யது said...

படிக்க எடுத்து கொள்ளும் நேரம் 3 அல்லது 4 நிமிடங்களாக இருந்தாலும் படித்து முடிக்கும் போது

வாசகனை "அட" போட வைக்கும் சிறுகதை.

repeatuuuuuuuu

rose said...

கதை ஆசிரியரே வாழ்த்துக்கள்

rose said...

உங்க வரிகள் நல்லா இருக்கு தலைவா

rose said...

இல்லை சாவித்ரி விஷயம் இருக்கு, இவ்வளவு விசயமும் நடந்தது நீ கூட இருக்கும்போது தான், I think You are my bad luck. அதுனால என் பொண்டாட்டிக்கு போன் போட்டுக் கொடு. அவள்கிட்ட பேசி மன்னிப்பு கேக்கணும்" என்றான்.
\\
என்னா இது?

S.A. நவாஸுதீன் said...

வேத்தியன் said...

கதை நல்லா இருக்கு நண்பரே...

கடைசியில கொடுத்த ட்விஸ்ட் கலக்கல்...

வாழ்த்துகள்...

ரொம்ப நன்றி வேத்தியன்.

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

அது எப்படி ஆஸ்பத்திரி வாடையை அப்படியே கண்முன்னே கொண்டுவந்திருக்கே..இப்போதான் அனுபவிச்சிட்டு வந்திருக்கேன்.. ஹஹா
பட் இருந்தாலும் இங்கே அந்த டெட்டால் வாசம் எதுவுமே இல்லே, வீட்டைவிட நல்லாவே இருந்தது

வா மாப்ள. கதை நம்ம தமிழ்நாட்டுல நடக்குது மாப்ள, துபைல இல்லை. என்ன அங்க perfume வாசனை தலைவலியை தரும்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

அழகான எழுத்தோட்டம் மாப்ஸ்.. கதையோடு கலக்க வெச்சிட்டே நல்ல முயற்சி

முதல் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைச்சுடுச்சுன்னு நினைக்கிறேன் மாப்ள

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//
ஹா ஹா கதை அப்படி போகுதா... உனது வித்தியாசமான கதைக்களம் ரசித்தேன் மாப்ஸ்...............

நன்றி மாப்ள

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

பிளாக் டெம்லெட் சூப்பர்

சீனாவில் ஐஸ் மழை பெய்தபோது எடுத்த போட்டோ மாப்ள அது

S.A. நவாஸுதீன் said...

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

அதுவும் அந்த கடைசி ட்விஸ்ட்... கலக்கல்.

// அரை எண் 13,//

அறை எண் 13...

வாங்க அண்ணே. உங்க பின்னூட்டம் பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருக்கு

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

வாவ் !!! இங்க ஒரு சிறுகதையா ??

எல்லாமே சொல்லி வச்ச மாதிரி பின்றீங்க..

இங்க காலையில 3 மணிக்கு, அபுஅஃப்ஸர்,அமித்து அம்மா,நவாஸ் ஆகிய மூன்று எழுத்தாளார்களின் ஆக்கங்களை படித்து விட்டேன்,

மனம் நிறைந்து விட்டது.

வாங்க செய்யது. கதை ஓகேவா? சும்மா முதல் முயற்சிதான்.

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

//சில்லறையை பத்திரமா வாங்கிட்டு வாடா என்று சொன்னது மட்டும் கொஞ்சம் சத்தமாக காதில் விழுந்தது.//

ரசிக்க வைத்த வரிகள்.

நன்றி செய்யது

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

படிக்க எடுத்து கொள்ளும் நேரம் 3 அல்லது 4 நிமிடங்களாக இருந்தாலும் படித்து முடிக்கும் போது

வாசகனை "அட" போட வைக்கும் சிறுகதை.

இது போதும். இதைவிட வேற அவார்ட் தேவை இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கு செய்யது

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

மருத்துவமனை காட்சிகள் விவரிக்கும் போது ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடை வந்திருக்கிறது நவாஸுதீன்...

வாங்க புதியவன். ரொம்ப நன்றி தல.

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

யதார்த்தமான கதை...எதிர்பாராத திருப்பத்தில் முடித்திருக்கும் விதம் கதை மேலும் சிறப்பு...

உங்கள் வாழ்த்துக்கள் இருக்கும் வரை தொடருவேன். ரொம்ப நன்றி புதியவன்.

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

I think You are my bad luck. அதுனால என் பொண்டாட்டிக்கு போன் போட்டுக் கொடு. அவள்கிட்ட பேசி மன்னிப்பு கேக்கணும்" என்றான்.

semma twist nga anna

வாங்க சக்தி. கதை புடிச்சிருக்கா?

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

சாரதா ஆயா தரை முழுவதும் டெட்டால் கலந்த நீரால் துடைத்து விட்டு சென்று இருந்தாள். அதனால் ஆஸ்பத்திரி வாடை கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.

nalla hospital than polum

கதைகளில் வருவது அப்படிதான் இருக்கும் சக்தி. ஹா ஹா

S.A. நவாஸுதீன் said...

rose said...

கதை ஆசிரியரே வாழ்த்துக்கள்

வாங்க ரோஸ். எங்க ஒரு வாரமா ஆளக்காணோம்?.

நன்றி

S.A. நவாஸுதீன் said...

rose said...

உங்க வரிகள் நல்லா இருக்கு தலைவா

நிஜாமாவா?. ரொம்ப நன்றிபா.

S.A. நவாஸுதீன் said...

rose said...

இல்லை சாவித்ரி விஷயம் இருக்கு, இவ்வளவு விசயமும் நடந்தது நீ கூட இருக்கும்போது தான், I think You are my bad luck. அதுனால என் பொண்டாட்டிக்கு போன் போட்டுக் கொடு. அவள்கிட்ட பேசி மன்னிப்பு கேக்கணும்" என்றான்.
\\
என்னா இது?

அதானே கதையோட திருப்பம். பிடிக்கலையா?

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

கதை ஆசிரியரே வாழ்த்துக்கள்

வாங்க ரோஸ். எங்க ஒரு வாரமா ஆளக்காணோம்?.

நன்றி

\\
net problem

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

உங்க வரிகள் நல்லா இருக்கு தலைவா

நிஜாமாவா?. ரொம்ப நன்றிபா.

\\
உண்மையா சொன்னா நம்ப மாட்டீங்களே

S.A. நவாஸுதீன் said...

rose said...


நன்றி

\\
net problem

hope now it's ok

rose said...

அபுஅஃப்ஸர் said...
அழகான எழுத்தோட்டம் மாப்ஸ்.. கதையோடு கலக்க வெச்சிட்டே நல்ல முயற்சி

\\
உங்களை போல அபு

rose said...

அபுஅஃப்ஸர் said...
//"இல்லை சாவித்ரி விஷயம் இருக்கு, இவ்வளவு விசயமும் நடந்தது நீ கூட இருக்கும்போது தான், I think You are my bad luck. அதுனால என் பொண்டாட்டிக்கு போன் போட்டுக் கொடு. அவள்கிட்ட பேசி மன்னிப்பு கேக்கணும்" என்றான்.
//
ஹா ஹா கதை அப்படி போகுதா... உனது வித்தியாசமான கதைக்களம் ரசித்தேன் மாப்ஸ்...............

\\
ரசித்தீங்களா.......

rose said...

அ.மு.செய்யது said...
வாவ் !!! இங்க ஒரு சிறுகதையா ??

எல்லாமே சொல்லி வச்ச மாதிரி பின்றீங்க..

இங்க காலையில 3 மணிக்கு, அபுஅஃப்ஸர்,அமித்து அம்மா,நவாஸ் ஆகிய மூன்று எழுத்தாளார்களின் ஆக்கங்களை படித்து விட்டேன்,

மனம் நிறைந்து விட்டது.

\\
உங்க தொடர் எப்போ செய்யது?

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...


நன்றி

\\
net problem

hope now it's ok

\\
ஏன் தலைவா படம் பார்க்களையா?

rose said...

அ.மு.செய்யது said...
படிக்க எடுத்து கொள்ளும் நேரம் 3 அல்லது 4 நிமிடங்களாக இருந்தாலும் படித்து முடிக்கும் போது

வாசகனை "அட" போட வைக்கும் சிறுகதை.

\\
ஆமா ஆமா

rose said...

sakthi said...
மெல்ல அவன் கையை பிடித்து அவள் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய புன்னகை செய்தனர்.

enna oru pasam

\\
hahahaha

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
ஏன் தலைவா படம் பார்க்களையா?

இல்லப்பா, இன்னைக்கு ஆபீஸ் லீவு

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
ஏன் தலைவா படம் பார்க்களையா?

இல்லப்பா, இன்னைக்கு ஆபீஸ் லீவு

\\
அல்லாவே கவுத்திட்டாங்கனு சொல்லுங்க தலைவா

S.A. நவாஸுதீன் said...

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
ஏன் தலைவா படம் பார்க்களையா?

இல்லப்பா, இன்னைக்கு ஆபீஸ் லீவு

\\
அல்லாவே கவுத்திட்டாங்கனு சொல்லுங்க தலைவா

லீவு எனக்கு மட்டும்தாம்பா

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
ஏன் தலைவா படம் பார்க்களையா?

இல்லப்பா, இன்னைக்கு ஆபீஸ் லீவு

\\
அல்லாவே கவுத்திட்டாங்கனு சொல்லுங்க தலைவா

லீவு எனக்கு மட்டும்தாம்பா

\\
ஏன் ஏன்?

அப்துல்மாலிக் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
அழகான எழுத்தோட்டம் மாப்ஸ்.. கதையோடு கலக்க வெச்சிட்டே நல்ல முயற்சி

\\
உங்களை போல அபு
//

நாங்களெல்லாம் யாரு...

அப்துல்மாலிக் said...

//rose said...
S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
ஏன் தலைவா படம் பார்க்களையா?

இல்லப்பா, இன்னைக்கு ஆபீஸ் லீவு

\\
அல்லாவே கவுத்திட்டாங்கனு சொல்லுங்க தலைவா
//

எதை கவுத்திட்டாங்க???

S.A. நவாஸுதீன் said...

rose said...

லீவு எனக்கு மட்டும்தாம்பா

\\
ஏன் ஏன்?

ரொம்ப தூரம் பயணம் செய்ததால. ரியாத் டு ஜித்தாஹ் 1000 கிலோமீட்டர். (ஆனா பாருங்க விமானத்துல ஒரு மணி நேரம்தான் ஆச்சு)

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

லீவு எனக்கு மட்டும்தாம்பா

\\
ஏன் ஏன்?

ரொம்ப தூரம் பயணம் செய்ததால. ரியாத் டு ஜித்தாஹ் 1000 கிலோமீட்டர். (ஆனா பாருங்க விமானத்துல ஒரு மணி நேரம்தான் ஆச்சு)

\\
அதுசரி

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
அபுஅஃப்ஸர் said...
அழகான எழுத்தோட்டம் மாப்ஸ்.. கதையோடு கலக்க வெச்சிட்டே நல்ல முயற்சி

\\
உங்களை போல அபு
//

நாங்களெல்லாம் யாரு...

\\
பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளுனு தெறியும்ல‌

அப்துல்மாலிக் said...

//S.A. நவாஸுதீன் said...
rose said...

லீவு எனக்கு மட்டும்தாம்பா

\\
ஏன் ஏன்?

ரொம்ப தூரம் பயணம் செய்ததால. ரியாத் டு ஜித்தாஹ் 1000 கிலோமீட்டர். (ஆனா பாருங்க விமானத்துல ஒரு மணி நேரம்தான் ஆச்சு)
//

படுபாவி மக்கா ஒரு மணிக்கு ஒரு நாளுனா நான் தினமும் 2.30 மணிநேரம் பயணம் செய்கிறேன் அஃபீஸுக்கும் வீட்டுக்கும்... எனக்கு எத்தனை நாள் தரனும்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
ஏன் தலைவா படம் பார்க்களையா?

இல்லப்பா, இன்னைக்கு ஆபீஸ் லீவு

\\
அல்லாவே கவுத்திட்டாங்கனு சொல்லுங்க தலைவா
//

எதை கவுத்திட்டாங்க???
\\

தலைவா ஜாலியா படம் பார்த்ததைப்பா

அப்துல்மாலிக் said...

//\\
அல்லாவே கவுத்திட்டாங்கனு சொல்லுங்க தலைவா
//

எதை கவுத்திட்டாங்க???
\\

தலைவா ஜாலியா படம் பார்த்ததைப்பா//

இனிமே புது ரிலீஸ் படங்கள் மாத்திரம்தான் பாக்கியாம்.. அதனாலே கவலைப்பட தேவையில்லை... என்ன கொடும sir இது

rose said...

அபுஅஃப்ஸர் said...
//S.A. நவாஸுதீன் said...
rose said...

லீவு எனக்கு மட்டும்தாம்பா

\\
ஏன் ஏன்?

ரொம்ப தூரம் பயணம் செய்ததால. ரியாத் டு ஜித்தாஹ் 1000 கிலோமீட்டர். (ஆனா பாருங்க விமானத்துல ஒரு மணி நேரம்தான் ஆச்சு)
//

படுபாவி மக்கா ஒரு மணிக்கு ஒரு நாளுனா நான் தினமும் 2.30 மணிநேரம் பயணம் செய்கிறேன் அஃபீஸுக்கும் வீட்டுக்கும்... எனக்கு எத்தனை நாள் தரனும்

\\
தலையெளுத்த யாரல அபு மாற்ற முடியும்

அப்துல்மாலிக் said...

//\\
தலையெளுத்த யாரல அபு மாற்ற முடியும்//

அதுவும் சரிதான் நல்லாயிருந்துட்டு போகட்டும் மக்கா.....

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
தலையெளுத்த யாரல அபு மாற்ற முடியும்//

அதுவும் சரிதான் நல்லாயிருந்துட்டு போகட்டும் மக்கா.....

\\
பார்திங்களா அபு தலைவா அமைதியா சிரிச்சுட்டு இருக்குறத‌

S.A. நவாஸுதீன் said...

rose said...
\\
பார்திங்களா அபு தலைவா அமைதியா சிரிச்சுட்டு இருக்குறத‌

அசர் ஸலாஹ் போயிருந்தேன்பா

rose said...

65

நட்புடன் ஜமால் said...

டேய் கதை நிஜமாவே நல்லாயிருக்கு

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

டேய் கதை நிஜமாவே நல்லாயிருக்கு

டிஸ்கி: முதல் முயற்சி, கொஞ்சமா நக்கல் அடிங்கப்பா!

sarathy said...

நல்லாயிருக்கு நவாஸ்...

S.A. நவாஸுதீன் said...

sarathy said...

நல்லாயிருக்கு நவாஸ்...

வாங்க சாரதி. முதல் முறையா வந்துருக்கீங்க. ரொம்ப சந்தோசம். நன்றி.

Unknown said...

கதை சொன்ன விதம் மிகவும் அருமை உன் முதல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

syed said...

கதை சொன்ன விதம் மிகவும் அருமை உன் முதல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

வா மச்சான். ரொம்ப தேங்க்ஸ்டா

Suresh said...

சூப்பர் கதை நண்பா

S.A. நவாஸுதீன் said...

Suresh said...

சூப்பர் கதை நண்பா

வாங்க சுரேஷ். முதல் முயற்சிதான். ஆதரவுக்கு நன்றி.

ivingobi said...

Kathai romba nalla irukku but last la konjam avalukku aaruthala irunthirukkalaam... 7 months kooda irunthavalukku ipdi oru shock a ..... aval manaiviyaa illa vittalum.... manai vi kooda irukkavillai avalai manasu noga vachuttingalae....

S.A. நவாஸுதீன் said...

ivingobi said...

Kathai romba nalla irukku but last la konjam avalukku aaruthala irunthirukkalaam... 7 months kooda irunthavalukku ipdi oru shock a ..... aval manaiviyaa illa vittalum.... manai vi kooda irukkavillai avalai manasu noga vachuttingalae....

சும்மா கதைல ஒரு திருப்பம் வேணும் இல்லையா அதான்.

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
அது எப்படி ஆஸ்பத்திரி வாடையை அப்படியே கண்முன்னே கொண்டுவந்திருக்கே..இப்போதான் அனுபவிச்சிட்டு வந்திருக்கேன்.. ஹஹா
பட் இருந்தாலும் இங்கே அந்த டெட்டால் வாசம் எதுவுமே இல்லே, வீட்டைவிட நல்லாவே இருந்தது

naanum ithu konja nerathula anu anna blogapakkam vanthuteno pathen anna

gayathri said...

anna kathaai super

gayathri said...

மெல்ல அவன் கையை பிடித்து அவள் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய புன்னகை செய்தனர்.

romancesa nadakkatum nadakkatum

gayathri said...

vanthathuku oru 80 pottutu poren

gayathri said...

anna intha time 50 miss paniten so 80 naan than

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

anna kathaai super

என் தங்கச்சி சொன்னா சரியாதான் இருக்கும்.

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

மெல்ல அவன் கையை பிடித்து அவள் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய புன்னகை செய்தனர்.

romancesa nadakkatum nadakkatum

கிளைமாக்ஸ் படிச்சா ரொமான்ஸ் போயிடும்

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

anna intha time 50 miss paniten so 80 naan than

அம்பதோ, எம்பதோ, பின்னோட்டம் இடுவதில் நீ எப்பவுமே நம்பர் ஒன் தான் காயு.