Lilypie

Sunday, March 22, 2009

முதல் கடிதம்



முதல் கடிதம்

வெள்ளை காகிதம், பல வண்ணங்களில் அடிக்கோடிட்டு காட்ட மூவிரண்டு பேனாக்கள், மனதில் ஆயிரம் எண்ணங்கள், வரிசையாய் கோர்த்து வைத்த வார்த்தைகள், பல சமயங்களில் படித்த மேதாவித்தனம் நிறைந்த பல வாசகங்கள், எல்லாம் தயார்.

ஆனால் தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?, எத்தனை வார்த்தைகள் கிடைத்தாலும் அவை போதாது போல் தோன்றியது. என்னுயிர் ............, என்றபோது தொண்டைக்குள் உயிர் உருண்டு ஓடுகிறது. தொடக்கமே உனக்கு எதிர்பாராதது போல தோன்றுமோ என்ற அச்சம் வர அடுத்த காகிதம் அவசரமாய் வருகிறது.

மீண்டும் யோசிக்கிறேன். நான் செய்வது முறையா? தவறு என்று பல குரல்கள், பல பக்கம் இருந்து வந்தாலும், ஒரு குரல் உள்ளே இருந்து வருகிறது, வந்தது உன் தவறில்லை, காதலின் தவறு என்று.

அதனால் தவறு என்னுடையது இல்லை,
உன்னை காணும்போது என் செயல்களும்,
பேசும்போது தடுமாற்றமும்,
என்னை ஊடகமாய் பயன்படுத்தி
என் இதயம் உனக்கு புரியவைக்க,
மூளையிடம் பெற்ற பரஸ்பர உதவிகள்.
இதில் என் தவறில்லை.

இருவரும் விழிக்கடலில் விட்ட காதல்கப்பல், இதயத்துறைமுகத்தை அடைந்தும் அதை சொல்லமுடியாமல் அவதிப்பட்டோம்.



இறுதியில், எழுதிய அனைத்தும் எனக்குள் கலக்கத்தை தந்தாலும் இது நிதர்சனமான உண்மை என்று புரிந்ததால் பத்திரமாக மடித்து பாங்கோடு அதை, தேடி அலைந்து வாங்கிய அழகிய வண்ணக்கவரில் இட்டேன்.

விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்

61 comments:

நட்புடன் ஜமால் said...

அருமை நண்பா ...

கடிதத்தின் துவக்கத்தையே ஒரு கடிதமாக மாற்றி

அருமை ...

நட்புடன் ஜமால் said...

\\விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்\\

இது டாப்பு ...

S.A. நவாஸுதீன் said...

வா மாப்ள

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

\\விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்\\

இது டாப்பு ...

ஆனால் நீ முதல் பின்னூட்டம் இடுவது விசித்திரம் அல்ல

அப்துல்மாலிக் said...

//என்னுயிர் ............, என்றபோது தொண்டைக்குள் உயிர் உருண்டு ஓடுகிறது//

நம்ம பிளாக்கெல்லாம் அடிபடுறாப்புலே இருக்கு

இப்போதெரியுதா என்ன ரகசியமென்று ஹா ஹா

அப்துல்மாலிக் said...

//வெள்ளை காகிதம், பல வண்ணங்களில் அடிக்கோடிட்டு காட்ட மூவிரண்டு பேனாக்கள், மனதில் ஆயிரம் எண்ணங்கள், வரிசையாய் கோர்த்து வைத்த வார்த்தைகள், பல சமயங்களில் படித்த மேதாவித்தனம் நிறைந்த பல வாசகங்கள், //

கடிதம் எழுத ஆரம்பிக்கும்போதே உள்ள அலப்பரய அலப்பலா சொல்லிருக்கே

அப்துல்மாலிக் said...

//தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?, எத்தனை வார்த்தைகள் கிடைத்தாலும் அவை போதாது போல் தோன்றியது. என்னுயிர் ............,///


என்னுயிரே................
இப்படி ஆரம்பிச்சா கவிதை வார்த்தைகள் தானா கொட்டும்...

அப்துல்மாலிக் said...

//தொடக்கமே உனக்கு எதிர்பாராதது போல தோன்றுமோ என்ற அச்சம் வர அடுத்த காகிதம் அவசரமாய் வருகிறது//

இடை யிடையே மானே, தேனேனு சேர்த்துக்க வேண்டியதுதானே

அப்துல்மாலிக் said...

//இருவரும் விழிக்கடலில் விட்ட காதல்கப்பல், இதயத்துறைமுகத்தை அடைந்தும் அதை சொல்லமுடியாமல் அவதிப்பட்டோம்.
//

இது கலக்கல் வரிகள்... அட்டகாசம் (தல பத்தி இல்லே)

அப்துல்மாலிக் said...

//இருவரும் விழிக்கடலில் விட்ட காதல்கப்பல், இதயத்துறைமுகத்தை அடைந்தும்//

நங்கூரத்தை போட்டுடவேண்டியதுதானே

அப்துல்மாலிக் said...

//விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்
///


ஆஹா இது கலக்கல்..

இப்படி எத்தனபேரு கெளம்பிருக்கீங்க‌

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்
///


ஆஹா இது கலக்கல்..

இப்படி எத்தனபேரு கெளம்பிருக்கீங்க‌

மச்சான், கொஞ்சம் பின்னாடி பாரு. உனக்கு பின்னால் நானும் எனக்கு பின்னால் வந்து நிற்கும் கூட்டத்தையும்

அப்துல்மாலிக் said...

//Syed Ahamed Navasudeen said...
அபுஅஃப்ஸர் said...

//விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்
///


ஆஹா இது கலக்கல்..

இப்படி எத்தனபேரு கெளம்பிருக்கீங்க‌

மச்சான், கொஞ்சம் பின்னாடி பாரு. உனக்கு பின்னால் நானும் எனக்கு பின்னால் வந்து நிற்கும் கூட்டத்தையும்
//\


அவ்வளவு பேரு அலையுரீங்களா, அடக்கொடுமையே இந்த பூமிதாங்காதுப்பா

rose said...

மனதில் ஆயிரம் எண்ணங்கள், வரிசையாய் கோர்த்து வைத்த வார்த்தைகள், பல சமயங்களில்


சொல்லுங்க தலைவா?

rose said...

ஆனால் தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?,


காதல் மன்னன் ஜமால்கிட்ட கேலுங்க‌

rose said...

இருவரும் விழிக்கடலில் விட்ட காதல்கப்பல், இதயத்துறைமுகத்தை அடைந்தும் அதை சொல்லமுடியாமல் அவதிப்பட்டோம்.

அடடடா.......

rose said...

விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்

சூப்பர்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//தொடக்கமே உனக்கு எதிர்பாராதது போல தோன்றுமோ என்ற அச்சம் வர அடுத்த காகிதம் அவசரமாய் வருகிறது//

இடை யிடையே மானே, தேனேனு சேர்த்துக்க வேண்டியதுதானே

அனுபவம் பேசுது

S.A. நவாஸுதீன் said...

rose said...

அபுஅஃப்ஸர் said...
//தொடக்கமே உனக்கு எதிர்பாராதது போல தோன்றுமோ என்ற அச்சம் வர அடுத்த காகிதம் அவசரமாய் வருகிறது//

இடை யிடையே மானே, தேனேனு சேர்த்துக்க வேண்டியதுதானே

அனுபவம் பேசுது

மச்சான் மாலிக், ரோஸ்ல முள்ளு குத்த ஆரம்பிச்சிடுச்சு

S.A. நவாஸுதீன் said...

முள்ள முள்ளால்தான் எடுக்கணும். போடுற நீ

rose said...

Syed Ahamed Navasudeen said...
rose said...

அபுஅஃப்ஸர் said...
//தொடக்கமே உனக்கு எதிர்பாராதது போல தோன்றுமோ என்ற அச்சம் வர அடுத்த காகிதம் அவசரமாய் வருகிறது//

இடை யிடையே மானே, தேனேனு சேர்த்துக்க வேண்டியதுதானே

அனுபவம் பேசுது

மச்சான் மாலிக், ரோஸ்ல முள்ளு குத்த ஆரம்பிச்சிடுச்சு

அது யாருங்க மாலிக் ஹி ஹி ஹி

ஹேமா said...

செய்யது அகமது நவாஸ்,இன்னும் சொல்லலியா அவங்ககிட்ட.காதலை ஒருநாளும் சொல்லப் பிந்தக் கூடாதுன்னு சொல்லுவாங்க.ஏன்னா கை தவறிப் போய்டுமாம்.சீக்கிரம் சொல்லிடுங்க.வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

ஹேமா said...

செய்யது அகமது நவாஸ்,இன்னும் சொல்லலியா அவங்ககிட்ட.காதலை ஒருநாளும் சொல்லப் பிந்தக் கூடாதுன்னு சொல்லுவாங்க.ஏன்னா கை தவறிப் போய்டுமாம்.சீக்கிரம் சொல்லிடுங்க.வாழ்த்துக்கள்

நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்.

இது முதல் கடிதம் மட்டும் அல்ல முடிந்த கடிதம். அருகில் இருந்த யாரோ, யாரையோ அந்தப் பெயர் கொண்டு அழைக்க, மீண்டும் ஒருமுறை பின்னோக்கி பார்த்ததின் பிரதிபலிப்பு தன் இது.

அப்துல்மாலிக் said...

//ஹேமா said...
செய்யது அகமது நவாஸ்,இன்னும் சொல்லலியா அவங்ககிட்ட.காதலை ஒருநாளும் சொல்லப் பிந்தக் கூடாதுன்னு சொல்லுவாங்க.ஏன்னா கை தவறிப் போய்டுமாம்.சீக்கிரம் சொல்லிடுங்க.வாழ்த்துக்கள்
//

ஆமாம் சீக்கிரம் சொல்லிடனும், சரியா? தப்பா என்பதெல்லாம் அப்புறம்

அப்துல்மாலிக் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//தொடக்கமே உனக்கு எதிர்பாராதது போல தோன்றுமோ என்ற அச்சம் வர அடுத்த காகிதம் அவசரமாய் வருகிறது//

இடை யிடையே மானே, தேனேனு சேர்த்துக்க வேண்டியதுதானே

அனுபவம் பேசுது
//

ஹி ஹி ஹி ஹி
அனுபவம்தானே எல்லாத்தினுடைய பிரதிபலிப்பு

அப்துல்மாலிக் said...

//rose said...
ஆனால் தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?,


காதல் மன்னன் ஜமால்கிட்ட கேலுங்க‌
//

இது எப்பவுலேர்ந்து....சொல்லவேயில்லே ஹி ஹி ஹி

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
ஆனால் தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?,


காதல் மன்னன் ஜமால்கிட்ட கேலுங்க‌
//

இது எப்பவுலேர்ந்து....சொல்லவேயில்லே ஹி ஹி ஹி

கிளம்பிட்டிங்களா நான் ஜமாலோட காதல் திருமணத்தை சொன்னேன்ப்பா

அப்துல்மாலிக் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
ஆனால் தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?,


காதல் மன்னன் ஜமால்கிட்ட கேலுங்க‌
//

இது எப்பவுலேர்ந்து....சொல்லவேயில்லே ஹி ஹி ஹி

கிளம்பிட்டிங்களா நான் ஜமாலோட காதல் திருமணத்தை சொன்னேன்ப்பா
/

ஜமால் காதல் திருமணமா?

இது தெரியாம போச்சே

கொஞ்சம் விளக்கி சொன்னா தேவலாம், நாமும் தெரிஞ்சிக்கலாம்லே

நட்புடன் ஜமால் said...

\\அபுஅஃப்ஸர் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
ஆனால் தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?,


காதல் மன்னன் ஜமால்கிட்ட கேலுங்க‌
//

இது எப்பவுலேர்ந்து....சொல்லவேயில்லே ஹி ஹி ஹி

கிளம்பிட்டிங்களா நான் ஜமாலோட காதல் திருமணத்தை சொன்னேன்ப்பா
/

ஜமால் காதல் திருமணமா?

இது தெரியாம போச்சே

கொஞ்சம் விளக்கி சொன்னா தேவலாம், நாமும் தெரிஞ்சிக்கலாம்லே\\

என்னைய வச்சி

காமெடி ...

அப்துல்மாலிக் said...

//நட்புடன் ஜமால் said...
\\அபுஅஃப்ஸர் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
ஆனால் தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?,


காதல் மன்னன் ஜமால்கிட்ட கேலுங்க‌
//

இது எப்பவுலேர்ந்து....சொல்லவேயில்லே ஹி ஹி ஹி

கிளம்பிட்டிங்களா நான் ஜமாலோட காதல் திருமணத்தை சொன்னேன்ப்பா
/

ஜமால் காதல் திருமணமா?

இது தெரியாம போச்சே

கொஞ்சம் விளக்கி சொன்னா தேவலாம், நாமும் தெரிஞ்சிக்கலாம்லே\\

என்னைய வச்சி

காமெடி ...
///


அதான!! ஜமாலை வெச்சி காமெடி கீமெடி....

cute baby said...

சூப்பரா கடிதத்தின் ஆரம்பம் வைத்தே ஒரு பதிவு போட்டுடீங்க.

cute baby said...

அதிலும் முடிவு கலக்கல்

cute baby said...

ஹேமா said...
செய்யது அகமது நவாஸ்,இன்னும் சொல்லலியா அவங்ககிட்ட.காதலை ஒருநாளும் சொல்லப் பிந்தக் கூடாதுன்னு சொல்லுவாங்க.ஏன்னா கை தவறிப் போய்டுமாம்.சீக்கிரம் சொல்லிடுங்க.வாழ்த்துக்கள்.
//
ஹேமா இப்போ அவங்க சொல்ல முடியாது கால தாமதம் அதிகமாகி போச்சே!கடிதம் எழுதியது ஒரு பெண்னுக்கு இப்போ மனைவியாக இருப்பவங்க வேற.நான் சொல்லுவது சரிதான நண்பா!

cute baby said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
ஆனால் தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?,


காதல் மன்னன் ஜமால்கிட்ட கேலுங்க‌
//

இது எப்பவுலேர்ந்து....சொல்லவேயில்லே ஹி ஹி ஹி

கிளம்பிட்டிங்களா நான் ஜமாலோட காதல் திருமணத்தை சொன்னேன்ப்பா
/

ஜமால் காதல் திருமணமா?

இது தெரியாம போச்சே

கொஞ்சம் விளக்கி சொன்னா தேவலாம், நாமும் தெரிஞ்சிக்கலாம்லே

March 23, 2009 12:44 AM


நட்புடன் ஜமால் said...
\\அபுஅஃப்ஸர் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
ஆனால் தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?,


காதல் மன்னன் ஜமால்கிட்ட கேலுங்க‌
//

இது எப்பவுலேர்ந்து....சொல்லவேயில்லே ஹி ஹி ஹி

கிளம்பிட்டிங்களா நான் ஜமாலோட காதல் திருமணத்தை சொன்னேன்ப்பா
/

ஜமால் காதல் திருமணமா?

இது தெரியாம போச்சே

கொஞ்சம் விளக்கி சொன்னா தேவலாம், நாமும் தெரிஞ்சிக்கலாம்லே\\

என்னைய வச்சி

காமெடி ...

அபு,ஜமால் இதுலாம் உங்களுக்கு கொஞ்சம் அதிகமாக தெரியல?

S.A. நவாஸுதீன் said...

cute baby said...

சூப்பரா கடிதத்தின் ஆரம்பம் வைத்தே ஒரு பதிவு போட்டுடீங்க.

வாங்க 2,3 நாளா காணோமேன்னு பாத்தேன். எப்டி இருக்கீங்க?. இருந்தாலும் உங்க Calculaion ரொம்ப சரி

cute baby said...

நன்றி!நன்றி! நான் நலம் நீங்க எப்படி இருக்கீங்க‌

S.A. நவாஸுதீன் said...

இறைவன் அருளால் மிக்க நலம்

rose said...

நட்புடன் ஜமால் said...
\\அபுஅஃப்ஸர் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
ஆனால் தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?,


காதல் மன்னன் ஜமால்கிட்ட கேலுங்க‌
//

இது எப்பவுலேர்ந்து....சொல்லவேயில்லே ஹி ஹி ஹி

கிளம்பிட்டிங்களா நான் ஜமாலோட காதல் திருமணத்தை சொன்னேன்ப்பா
/

ஜமால் காதல் திருமணமா?

இது தெரியாம போச்சே

கொஞ்சம் விளக்கி சொன்னா தேவலாம், நாமும் தெரிஞ்சிக்கலாம்லே\\

என்னைய வச்சி

காமெடி ...

அபு,ஜமால் இதுலாம் உங்களுக்கு கொஞ்சம் அதிகமாக தெரியல?

அவங்க எப்போதுமே அப்படிதாம் க்யூட் பேபி அதுல ஒரு ஆல மரந்துடிங்களா

தேவன் மாயம் said...

இறுதியில், எழுதிய அனைத்தும் எனக்குள் கலக்கத்தை தந்தாலும் இது நிதர்சனமான உண்மை என்று புரிந்ததால் பத்திரமாக மடித்து பாங்கோடு அதை, தேடி அலைந்து வாங்கிய அழகிய வண்ணக்கவரில் இட்டேன்.///

அனுப்பப்படாத காதல் கடிதங்கள் அதிகம்தான்!

S.A. நவாஸுதீன் said...

thevanmayam said...

இறுதியில், எழுதிய அனைத்தும்
அனுப்பப்படாத காதல் கடிதங்கள் அதிகம்தான்!

உண்மைதான் தேவன்

S.A. நவாஸுதீன் said...

rose said...

நட்புடன் ஜமால் said...

அவங்க எப்போதுமே அப்படிதாம் க்யூட் பேபி அதுல ஒரு ஆல மரந்துடிங்களா

3-வது ஆளு யாரு?

cute baby said...

Syed Ahamed Navasudeen said...
rose said...

நட்புடன் ஜமால் said...

அவங்க எப்போதுமே அப்படிதாம் க்யூட் பேபி அதுல ஒரு ஆல மரந்துடிங்களா

3-வது ஆளு யாரு?



அதானே! யாருங்க அது

S.A. நவாஸுதீன் said...

cute baby said...

அவங்க எப்போதுமே அப்படிதாம் க்யூட் பேபி அதுல ஒரு ஆல மரந்துடிங்களா

3-வது ஆளு யாரு?

அதானே! யாருங்க அது

ஹையோ ஹையோ

cute baby said...

Syed Ahamed Navasudeen said...
cute baby said...

அவங்க எப்போதுமே அப்படிதாம் க்யூட் பேபி அதுல ஒரு ஆல மரந்துடிங்களா

3-வது ஆளு யாரு?

அதானே! யாருங்க அது

ஹையோ ஹையோ

//
???????????/

S.A. நவாஸுதீன் said...

??????????????? போட்டு இருக்கிறது, கொஞ்சம் வளைந்து நெளிந்து இருந்தால் ரோஜா மாதிரி இருக்காது?

இல்ல ஒரு சின்னதா ஒரு சந்தேகம்!!!!!!!!!!!

gayathri said...

விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்
ennga anna innuma ungala lova solla sekara sollidunga anna

gayathri said...

//இருவரும் விழிக்கடலில் விட்ட காதல்கப்பல், இதயத்துறைமுகத்தை அடைந்தும் அதை சொல்லமுடியாமல் அவதிப்பட்டோம்.

super anna

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

//இருவரும் விழிக்கடலில் விட்ட காதல்கப்பல், இதயத்துறைமுகத்தை அடைந்தும் அதை சொல்லமுடியாமல் அவதிப்பட்டோம்.

super anna

என் தங்கச்சி என் பதிவுக்கு வந்ததே எனக்கு பெரிய சந்தோசம்.

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
gayathri said...

//இருவரும் விழிக்கடலில் விட்ட காதல்கப்பல், இதயத்துறைமுகத்தை அடைந்தும் அதை சொல்லமுடியாமல் அவதிப்பட்டோம்.

super anna

என் தங்கச்சி என் பதிவுக்கு வந்ததே எனக்கு பெரிய சந்தோசம்.

thank u anna

gayathri said...

ok me they 50

S.A. நவாஸுதீன் said...

ஹே! எல்லாரும் ஜோரா ஒரு தடவ கை தட்டுங்கப்பா. இத்தன பதிவு போட்டு இருக்கேன். முதல் முறையா என் தங்கச்சி தான்பா 50 போட்டிருக்கு. வாழ்த்துக்கள் காயு

Tech Shankar said...

s u p e r
//தேடி அலைந்து வாங்கிய அழகிய வண்ணக்கவரில் இட்டேன்.

விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்

Tech Shankar said...

எப்படிங்க இப்படியெல்லாம்

மேவி... said...

nalla irukku

S.A. நவாஸுதீன் said...

வாங்க MayVee, வாங்க தமிழ் நெஞ்சம். ஏதோ உங்கள மாதிரி நண்பர்கள் கொடுக்குற தைரியத்துல இப்படி உளறி கொட்டிட்றேன்

Unknown said...

அருமையான பதிவு தோழர். அனேகருக்கு முதல் கடிதம் தன்னுடனே இருந்துவிடும் நிலைதான்...அழகாகச் சொல்லியுள்ளீர்கள் சையது.

S.A. நவாஸுதீன் said...

நன்றி உமாசக்தி. உங்களின் வருகையும் ஊக்கமூட்டும் வரிகளும் கண்டு மிக்க மகிழ்ச்சி.

coolzkarthi said...

மிக நன்றாக இருந்தது அண்ணா....உண்மையில் மிகவும் என்ஜாய் பண்ணி படித்தேன்....

S.A. நவாஸுதீன் said...

coolzkarthi said...

மிக நன்றாக இருந்தது அண்ணா....உண்மையில் மிகவும் என்ஜாய் பண்ணி படித்தேன்....


உங்கள மாதிரியே உங்க பின்னூட்டமும் ஜில்லுன்னு இருக்கு கார்த்தி. ரொம்ப நன்றி.

புதியவன் said...

//இருவரும் விழிக்கடலில் விட்ட காதல்கப்பல், இதயத்துறைமுகத்தை அடைந்தும் அதை சொல்லமுடியாமல் அவதிப்பட்டோம்.//

உங்கள் முதல் கடிதத்தில் உணர்வுகள் சொன்ன
விதம் அழகு...

//விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்//

அருமையா முடிச்சிருக்கீங்க
நவாஸ்...வாழ்த்துக்கள்...
தொடர்ந்து எழுதுங்க...

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

//இருவரும் விழிக்கடலில் விட்ட காதல்கப்பல், இதயத்துறைமுகத்தை அடைந்தும் அதை சொல்லமுடியாமல் அவதிப்பட்டோம்.//

உங்கள் முதல் கடிதத்தில் உணர்வுகள் சொன்ன
விதம் அழகு...

//விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்//

அருமையா முடிச்சிருக்கீங்க
நவாஸ்...வாழ்த்துக்கள்...
தொடர்ந்து எழுதுங்க...


புதியவன் நீங்கள் வந்ததே பெருமை. உங்களின் வாழ்த்தும் வேறு கிட்டிவிட்டது. இனி என்ன, நிச்சயம் தொடரும்.