Lilypie

Thursday, December 17, 2009

போடி!!!


நேற்றைய
கடைசி முத்தமும்
இன்றைய
முதல் முத்தமும்
சந்திக்கும்வரை
கட்டியவள் நீ
கட்டிவிட்ட கைக்கடிகாரம்
சொல்லாமல் சொன்னது
நொடிக்கொருதரம்
இறக்கவும்
பிறக்கவும்
காதல் போதுமென்று

பைங்கிளியே
பாரிஜாதமே
என்றேன்
பைத்தியமென்கிறாய்
போடி என்றேன்
பைத்தியமாகிறாய்

பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய்
வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல்

 

டிஸ்கி: புரியுறமாதிரி எழுதுன்னு மிரட்டிய தமிழரசிக்காக 

92 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//நொடிக்கொருதரம்
இறக்கவும்
பிறக்கவும்
காதல் போதுமென்று
//

நல்லா வந்துருக்கு நவாஸ்
தமிழ் மேடம் மிரட்டுறாங்களா
சரி விடுங்க ஆட்டோ அனுப்பிடலாம்
என்னையும்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

////
நேற்றைய
கடைசி முத்தமும்
இன்றைய
முதல் முத்தமும்
சந்திக்கும்வரை
கட்டியவள் நீ
கட்டிவிட்ட கைக்கடிகாரம்
சொல்லாமல் சொன்னது
நொடிக்கொருதரம்
இறக்கவும்
பிறக்கவும்
காதல் போதுமென்று ////

அருமையான வரிகள் .

காதலின் தீபம் நெஞ்சினிலே

மறந்தேன் அனைத்தையும் !!!

நவாஸ் , அருமையான கவிதை

நல்லாருக்கு

பா.ராஜாராம் said...

பத்த வச்சுட்டியே பரட்டை...

பசலையில் இப்படி குளிர் காய்ந்து கொள்ள வேண்டியதுதான்.அருமையாய் வந்திருக்கு மக்கா.

தமிழ்,இப்படி நீங்க மிரட்டி கொண்டே இருங்கள்.அப்பத்தான் பார்ட்டி பதிவு போடுவார்!பின்னூட்ட பார்ட்டி!..

வாழ்க தமிழ்!

அருள்மொழியன் said...

காதலை பற்றி சிந்திக்காதவரை கூட‌
காதலை சந்திக்க தூண்டும் கவிதை

அருமை என்று ஒற்றை வார்த்தையில் வாழ்த்த இயலாமல் நல்ல வார்தை தேடுகிறேன்

பூங்குன்றன்.வே said...

//பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய்
வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல்//

எப்படி நண்பா? எப்படி இது? ரொம்ப புடிச்சிருக்கு இந்த வரிகள்.

சிநேகிதன் அக்பர் said...

//பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய்
வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல் //

நெகிழ்ச்சியான வரிகள்.

இப்ப நல்லா புரியுது.

நட்புடன் ஜமால் said...

தலைப்பிலேயே தான் சொல்லிட்டியேடா

அப்புறம் எதுக்கு இத்தனை வரிகள்

;)

நட்புடன் ஜமால் said...

பைங்கிளியே
பாரிஜாதமே
என்றேன் ]]

ஆஹா! ஆஹா!

விளையாடுது மாப்ள ...

நீ விளையாடு.

நட்புடன் ஜமால் said...

வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல் ]]

மாப்ள அழுக்காகவே இருக்கட்டும்டா

வேண்டாம் கண்ணீர் ...

vasu balaji said...

//பா.ராஜாராம் said...

பத்த வச்சுட்டியே பரட்டை...

பசலையில் இப்படி குளிர் காய்ந்து கொள்ள வேண்டியதுதான்.அருமையாய் வந்திருக்கு மக்கா.//

இதையும் தாண்டே வேற எப்படி பாராட்ட முடியும். மிக மிக நெகிழ்ச்சியாய் அருமையாய் வந்திருக்குங்க நவாஸ்

விஜய் said...

காதல் பசலையின் வலி துடிக்கிறது கடிகாரம் போல்

வாழ்த்துக்கள்

விஜய்

க.பாலாசி said...

//பைங்கிளியே
பாரிஜாதமே
என்றேன்
பைத்தியமென்கிறாய்
போடி என்றேன்
பைத்தியமாகிறாய் //

அருமையான கவிதைங்கண்ணே...

அ.மு.செய்யது said...

//பைங்கிளியே
பாரிஜாதமே
என்றேன்
பைத்தியமென்கிறாய்
போடி என்றேன்
பைத்தியமாகிறாய் //


இது !!! இது !!! இது !!!! ரசித்தேன்.

நாங்களும் பைத்தியமாகிறோம் இந்த வரிகளை படித்து..!!!

செம்ம ரொமான்டிக்கா வந்திருக்கு நவாஸ் கவிதை !!!

தமிழம்மாவிற்கு நன்றி !!! இப்படி யாராவது கெளப்பி விட்டா தான் வழிக்கு வருவீங்கன்னு நினைக்கிறேன்.ரைட்டு !!! )

ஹேமா said...

நவாஸ்,மிரட்டல் கவிதையா....
இல்ல முத்தக் கவிதையா !

இப்பிடியெல்லாம் மிரட்டினா வேற என்னமோதான் வரும்ன்னு சொல்லுவாங்க.உங்களுக்கு கவிதை வந்திருக்கே !

பாலா said...

நேற்றைய முத்தக்கடைசியின் ஆயுள்
இன்றைய முதல் முத்தத்தில்
நீ கையளித்த கணம் சொட்டும்
முட்காட்டி சொல்லும் பிறவ,இறவ
காதலொன்று போதுமென்றே
பிதற்றல்கள் இயல்பாகிப்போன வாழ்வில்
ஊடிய பெருநெருப்பணைய மார்பில் புதையும்
உன் கண்ணீரில் கூட்டல் குறி போட்டபடி
மூழ்கி பரிசுத்தமானது கா.......... ??!!!!

பாலா said...

இதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதுல்ல நவாஸ் எனக்கு
தெரியும்யா இனிமே என் கடை பக்கம் வந்து எதுனா கேட்டீங்க
அப்புறம் இருக்கு கச்சேரி

ப்ரியமுடன் வசந்த் said...

//பாலா said...
நேற்றைய முத்தக்கடைசியின் ஆயுள்
இன்றைய முதல் முத்தத்தில்
நீ கையளித்த கணம் சொட்டும்
முட்காட்டி சொல்லும் பிறவ,இறவ
காதலொன்று போதுமென்றே
பிதற்றல்கள் இயல்பாகிப்போன வாழ்வில்
ஊடிய பெருநெருப்பணைய மார்பில் புதையும்
உன் கண்ணீரில் கூட்டல் குறி போட்டபடி
மூழ்கி பரிசுத்தமானது கா.......... ??!!!!
//

மாப்பி இங்கன மட்டும் வக்கனையா நல்லா புரியுற மாதிரி எழுது இத உன் ப்லாக்ல் எழுதுனா குறஞ்சு போவியா...?

உன் ப்லாக் படிச்சு படிச்சு ...முடில

உன்னைய அந்த கப்பல் மாலுமிட்ட சொல்லி கடலுக்குள்ள தள்ளி விட சொல்றேன் இருடியேய்...

பாலா said...

ஹஹஹஹஹஹஅஹஹா மாப்ள
கோவிச்சுகாதடி செல்லம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிரட்டுனாதான் பதிவு வருமோ? :)

கவிதை ரசிக்கும்படி இருந்தது.

SUFFIX said...

பெரியவங்க எல்லாம வந்து சொல்லிட்டாங்களே, ரொம்ப அருமையா இருக்கு நவாஸ்.

//பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய்
வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல்//

இது ரொம்ப டச்சிங்!!

SUFFIX said...

தமிழ் டீச்சர் மாதிரி நல்லவங்க இருக்கிறதனாலதான் என்னைப் போன்றோரெல்லாம் புரியும்படியா கவிதைகளை படிக்க‌ முடியுது. வாழ்க தமிழின் சேவை.

அப்துல்மாலிக் said...

முதலில் தமிழுக்கு நன்றி, நானும் வரிகள் புரியாமல் நிறைய திட்டிருக்கேன்

மச்சான் க்ளாஸ் வரிகள்

தனிமை....தாக்கத்தால் வந்த வரிகள்.. இன்னும் நிறைய வரும், எதிர்ப்பார்கிறேன்

gayathri said...

நேற்றைய
கடைசி முத்தமும்
இன்றைய
முதல் முத்தமும்
சந்திக்கும்வரை
கட்டியவள் நீ
கட்டிவிட்ட கைக்கடிகாரம்
சொல்லாமல் சொன்னது
நொடிக்கொருதரம்
இறக்கவும்
பிறக்கவும்
காதல் போதுமென்று

sariya than solli iruku kadikaraam

gayathri said...

பைங்கிளியே
பாரிஜாதமே
என்றேன்
பைத்தியமென்கிறாய்
போடி என்றேன்
பைத்தியமாகிறாய்

simply superga anna

அப்துல்மாலிக் said...

//பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய் //

ரொம்பா டச்சிங்கா இருக்குப்பா, அழ வைக்காதேப்பா

அப்துல்மாலிக் said...

//பைங்கிளியே
பாரிஜாதமே
என்றேன்
பைத்தியமென்கிறாய்
போடி என்றேன்
பைத்தியமாகிறாய்//

காதல் பித்துபைத்தியமா machan

gayathri said...

பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய்
வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல்

கண்ணீர் இல்லாமலும் பரிசுத்தம் அகலாம்க அண்ணா

gayathri said...

டிஸ்கி: புரியுறமாதிரி எழுதுன்னு மிரட்டிய தமிழரசிக்காக

en amma miradiyathal oru azhakana kavithaiya okok

Vidhoosh said...

நல்ல கவிதைங்க நவாஸ். வாழ்த்துக்கள் தமிழரசி.

--வித்யா

சிவாஜி சங்கர் said...

//நெஞ்சில் புதைந்தழுகிறாய்
வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல்//
நவாஸ் Sir, அருமையான கவிதை,அருமையான வரிகள் .
நல்லாருக்கு :))

பா.ராஜாராம் said...

நாளை மறுநாள் மற்றொரு கவிதை.சரியா?

ஒரு சிகரெட்டுக்கு ஒரு கவிதைப்பு!

Vidhya Chandrasekaran said...

கவிதையும் டிஸ்கியும் நல்லாருக்கு:)

Vidhya Chandrasekaran said...

கவிதையும் டிஸ்கியும் நல்லாருக்கு:)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை அருமை நவாஸ்.

sarathy said...

அருமை நவாஸ்...

எத்தனை காலம் காக்க வேண்டியிருக்கு...

தலைப்பு ரொம்ப சூப்பர்...

பாலாவோட டிங்கரிங் ஒர்க் பயங்கரமா இருக்கு.....

வெற்றி-[க்]-கதிரவன் said...

mm

நேசமித்ரன் said...

நண்பா நடத்து உன் காதல் ராஜாங்கத்தை

நிஜாம் கான் said...

எப்பா! தமிழரசிக்கு நானும் நன்றி சொல்லிக்கிறேன்பா. ஏன்னா இப்பதான் படிச்ச உடனே சட்டுன்னு புரிஞ்சது. ஆனாலும் நவாஸ்! பழைய மாதிரி யோசிச்சி கண்டுபிடிக்கிறதே ஒரு சுகம் தான். ஜிகே கூட. எப்புடி?????

நிஜாம் கான் said...

போடி'ன்னு மொதல்ல படிச்சதும் போடி நாயக்கனூர்னு நெனச்சிட்டேன். அப்பறந்தான் தெரியுது போடி'க்கு அர்த்தம். இருந்தாலும் நூர் லாட்ஜ் இடியாப்பம் மாதிரி சிக்கலா இருக்குற பழையபதிவுகள்ள இருக்குற ஒரு டுவிஸ்ட் இதில இல்லை.

Chitra said...

பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய்
வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல்

....... very romantic!

கமலேஷ் said...

கவிதை சும்மா கலக்குது போங்க...
ஒவ்வொரு வரிகளும் ரொம்ப அழகா இருக்கு..
கவிதை முடித்த விதம் மிக மிக அழகு...
வாழ்த்துக்கள் தோழரே...

Anonymous said...

//நேற்றைய
கடைசி முத்தமும்
இன்றைய
முதல் முத்தமும்
சந்திக்கும்வரை //

இந்த வரிகளின் விளைவு என் அடுத்த கவிதைக்கு கரு தயார்...

சந்திக்கும் வரை என்ற வார்த்தை சிந்திக்க வைக்கிறதே...

Anonymous said...

//கட்டிவிட்ட கைக்கடிகாரம்
சொல்லாமல் சொன்னது
நொடிக்கொருதரம்
இறக்கவும்
பிறக்கவும்
காதல் போதுமென்று //

புரிகிறது உங்கள் கடிகாரம் கூட உங்கள் காதலால் தான் நேரத்தை சொல்கிறது போலும்.. வலிமையான வார்த்தை காதலுக்கு வலிமை சேர்த்த வார்த்தை..

Anonymous said...

பைங்கிளியே
பாரிஜாதமே
என்றேன்
பைத்தியமென்கிறாய்

ம்ம்ம் நல்ல புள்ள மாதிரி இருந்துகிட்டு இப்படியெல்லாம் வேற கூப்புடுவீங்களா? தங்கமணியை....ம்ம்ம் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கீங்க அப்பு..

Anonymous said...

போடி என்றேன்
பைத்தியமாகிறாய்

ஆம் இந்த போடி என்ற வார்த்தையில் உரிமை மட்டுமல்ல காதலும் கலந்துள்ளது..அனுபவித்திருக்கிறேன் என்னவனிடம்..

Anonymous said...

பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய்
வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல்

இது தாங்க காதல்
இது தாங்க காதல் கவிதை

புரியும் வகையில் எழுதியமைக்கு நன்றி நவாஸ் கவிதையில் உன்னை கண்டேன் நவாஸ் நடை நவாஸ் டச் நவாஸ் கவிதை..உன் பதிவில் உன்னை கண்டேன் நீண்ட நாட்களுக்கு பிறகு..

Anonymous said...

டிஸ்கி: புரியுறமாதிரி எழுதுன்னு மிரட்டிய தமிழரசிக்காக

அடப்பாவி இப்படியா போட்டுகுடுப்ப..இருக்கு இரு இதுக்கும் உனக்கு....

Anonymous said...

அபுஅஃப்ஸர் said...
//பைங்கிளியே
பாரிஜாதமே
என்றேன்
பைத்தியமென்கிறாய்
போடி என்றேன்
பைத்தியமாகிறாய்//

காதல் பித்துபைத்தியமா machan

அப்படித்தான் தெரியுது சிம்டம்ஸ் எல்லாம் அபு..

Anonymous said...

பா.ராஜாராம் said...
பத்த வச்சுட்டியே பரட்டை...

பசலையில் இப்படி குளிர் காய்ந்து கொள்ள வேண்டியதுதான்.அருமையாய் வந்திருக்கு மக்கா.

தமிழ்,இப்படி நீங்க மிரட்டி கொண்டே இருங்கள்.அப்பத்தான் பார்ட்டி பதிவு போடுவார்!பின்னூட்ட பார்ட்டி!..

வாழ்க தமிழ்!

அண்ணா அடுத்த மிரட்டல் அங்கதான் அதான்னா உங்க பதிவில் எப்படி வசதி...ஹிஹிஹி

Anonymous said...

பாலா said...
இதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதுல்ல நவாஸ் எனக்கு
தெரியும்யா இனிமே என் கடை பக்கம் வந்து எதுனா கேட்டீங்க
அப்புறம் இருக்கு கச்சேரி

ஹஹ்ஹா இப்படி நாமெல்லாம் ஆளுக்கு ஒரு பக்கம் மிரட்டினா பாவம் நவாஸ் என்ன பண்ணுவார்..இதுக்கெல்லாம் நாம அசர வேணாம் தொடர்ந்து மிரட்டுவோம் பாலா...

Anonymous said...

பிரியமுடன்...வசந்த் said...
//நொடிக்கொருதரம்
இறக்கவும்
பிறக்கவும்
காதல் போதுமென்று
//

நல்லா வந்துருக்கு நவாஸ்
தமிழ் மேடம் மிரட்டுறாங்களா
சரி விடுங்க ஆட்டோ அனுப்பிடலாம்
என்னையும்...

ஹேய் என்ன மெயில் பண்ணனுமா? அது அந்த பயமிருக்கட்டும்..

தமிழ் அமுதன் said...

///கட்டியவள் நீ
கட்டிவிட்ட கைக்கடிகாரம்
சொல்லாமல் சொன்னது
நொடிக்கொருதரம்
இறக்கவும்
பிறக்கவும்
காதல் போதுமென்று ///

supper boss

Btc Guider said...

//பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய்
வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல்//

அருமையான வரிகள்.மனசுல பதியுரமாதிரி எழுதறீங்க

"உழவன்" "Uzhavan" said...

அதுதானே காதலின் மகிமை.. அருமை

நாணல் said...

:)) ரொம்ப அழகான காதல் கவிதை.. நல்லா இருக்குங்க..

ஷாகுல் said...

//பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய்
வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல் //

அப்போ கிளிசரின் வாங்கி குடுங்க எப்போதும் சுத்தமா இருக்கும்-:D

நல்லா இருக்கு கவிதை.

thiyaa said...

நல்ல நடை
அருமை

கலகலப்ரியா said...

dhool...! arumai..!

Thenammai Lakshmanan said...

//வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல் //

அற்புதம் நவாஸ் இன்னும் எவ்வளவுதான் மனசுல அடக்கி வச்சு இருக்கீங்க அப்பப்ப வழியுதே

Thenammai Lakshmanan said...

தமிழரசி said...
//பைங்கிளியே
பாரிஜாதமே
என்றேன்
பைத்தியமென்கிறாய்

ம்ம்ம் நல்ல புள்ள மாதிரி இருந்துகிட்டு இப்படியெல்லாம் வேற கூப்புடுவீங்களா? தங்கமணியை....ம்ம்ம் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கீங்க அப்பு..//

hahaha
nice thamizarasi



ரைட்டு தனிமையிலும் இனிமை கண்டு கவி எழுத நவாஸ்சால்தான் முடியும்

Jaleela Kamal said...

கவிதை ரொம்ப நல்ல இருக்கு.

தமிழரசி மிரட்டியதால், எனக்கு புரியற மாதிரி எழுதி இருக்கீங்க நவாஸ், ஹாஹா

S.A. நவாஸுதீன் said...

நன்றி - வசந்த்

நன்றி - ஸ்டார்ஜன்

நன்றி - பா.ரா (அது திட்டுறது பத்தாதுன்னு நீங்க வேற ஏத்திவிடுறீங்களே மக்கா)

நன்றி - அருள்மொழியன் (சந்தோசமும்)

நன்றி - பூங்குன்றன்

நன்றி - அக்பர் (அப்பாடா.......)

S.A. நவாஸுதீன் said...

நன்றி - ஜமால் (அதானே. சரியாச் சொன்னே மாப்ள)

நன்றி - வானம்பாடிகள் பாலா சார்

நன்றி - கவிதைகள் விஜய்

நன்றி - க. பாலாசி

S.A. நவாஸுதீன் said...

நன்றி - அ.மு.செ.(வாங்க சீதேவி, தமிழுக்கு முன்னாடி நீங்கதானே வாப்பா கொளுத்திப்போட்டது. இப்ப சந்தோசமா)

நன்றி - ஹேமா (இந்தப் பச்ச புள்ளைய என்னமா மிரட்டுறாங்க தெரியுமா)

நன்றி - பாலா (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். நாம தனியா பேசி சமாதானம் ஆயிக்கலாம்)

நன்றி - அமித்தம்மா (நீங்க இன்னும் போட்டிக்கான கவிதையை படிக்கலேன்னு நினைக்கிறேன்)

S.A. நவாஸுதீன் said...

நன்றி - ஷஃபி

நன்றி - அபு அஃப்ஸர்

நன்றி - காயு

நன்றி - வித்யா

நன்றி - சிவாஜி சங்கர்

na.jothi said...

நல்லா இருக்கு நவாஸ்

அன்புடன் மலிக்கா said...

//பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய்
வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல் //

கவிதை மிக மிக அருமை நவாஸண்ணா, போடி என்ற இரு எழுத்துக்குள் எழுந்த காதல் மலர்ந்து மகிழம்பூவாய் மணக்கிறது..

S.A. நவாஸுதீன் said...

நன்றி - பா.ரா. (மறுபடியும் பத்த வைக்கிறியளே மக்கா)

நன்றி - வித்யா

நன்றி - சாரதி

நன்றி - கதிரவன்

நன்றி - நேசமித்ரன் (கூட நீங்க இருக்கும்போது எனக்கென்ன பயம் நண்பா)

நன்றி - நிஜாம் பாய். (டுவிஸ்ட் இல்லாம எனக்கும் சங்கடமாதான் இருக்கு, அடுத்த தடவை பூர்த்தி பண்ணிடுவோம்)

S.A. நவாஸுதீன் said...

நன்றி - சித்ரா

நன்றி - கமலேஷ்

நன்றி - தமிழரசி (ஊரையே மிரட்டிகிட்டு இருக்க நீ. இப்ப சந்தோசமா உனக்கு, கடைசியில டிஸ்கி போட்டு உன்னையும் மாட்டிவிட்டோம்ல)

நன்றி - தல

நன்றி - முஜிபுர் ரஹ்மான்

நன்றி - உழவரே (வாழ்த்துக்கள் நண்பா, டிசம்பர் விகடன் மின்னிதழில் உங்கள் கவிதை பிரசுரமானதற்கு)

நன்றி - நாணல்

நன்றி - ஷாகுல்

S.A. நவாஸுதீன் said...

நன்றி - தியாவின் பேனா

நன்றி - கலகலப்ரியா

நன்றி - தேனம்மைலக்ஷ்மனன் (கவுண்டர் ஒருவழியா தீர்ப்பு சொல்லிட்டாரா இல்லையா)

நன்றி - சகோதரி ஜலீலா

நன்றி - ஜோதி

நன்றி - சகோதரி மலிக்கா (நட்பு கவிதையும் சூப்பர்)

"உழவன்" "Uzhavan" said...

//நன்றி - உழவரே (வாழ்த்துக்கள் நண்பா, டிசம்பர் விகடன் மின்னிதழில் உங்கள் கவிதை பிரசுரமானதற்கு)//
 
மகிழ்ச்சியும் நன்றியும் :-) இந்த மாத அகநாழிகையிலும் ஒரு கவிதை வந்துள்ளது.. பாருங்கள்.

S.A. நவாஸுதீன் said...

" உழவன் " " Uzhavan " said...
மகிழ்ச்சியும் நன்றியும் :-) இந்த மாத அகநாழிகையிலும் ஒரு கவிதை வந்துள்ளது.. பாருங்கள்.

சந்தோசாம் நண்பா. நீங்க கலக்குங்க

அன்புடன் அருணா said...

கலக்கல்ஸ்!

S.A. நவாஸுதீன் said...

///அன்புடன் அருணா said...
கலக்கல்ஸ்!///

நன்றி - அருணா மேடம்

Expatguru said...

அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

Expatguru said...
அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

வாங்க ராஜூ. ரொம்ப நன்றி.

Julaiha Nazir said...

//பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய் //
அருமையான வரிகள் படித்து விட்டு பாராட்டாமல் இருக்க முடியவில்லை வாழ்த்துக்கள் சகோதரரே
http://nahasha.blogspot.com/

S.A. நவாஸுதீன் said...

////Nahasi said...
//பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய் //
அருமையான வரிகள் படித்து விட்டு பாராட்டாமல் இருக்க முடியவில்லை வாழ்த்துக்கள் சகோதரரே
http://nahasha.blogspot.com/////

முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப சகோ.

S.A. நவாஸுதீன் said...

S.A. நவாஸுதீன் said...
////Nahasi said...
//பிரிந்து பின் சேர்ந்தால்
நெஞ்சில் புதைந்தழுகிறாய் //
அருமையான வரிகள் படித்து விட்டு பாராட்டாமல் இருக்க முடியவில்லை வாழ்த்துக்கள் சகோதரரே
http://nahasha.blogspot.com/////

முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி சகோ.

சத்ரியன் said...

//வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல் ..//

நவாஸ்,

ம்ம்ம்...!

இளமை வழிகிறது கவிதையில்...!
(என் தங்கச்சிக்கு தெரியுமா இந்த கவிதை சமாச்சாரம்?)

S.A. நவாஸுதீன் said...

சத்ரியன் said...
//வடியும் கண்ணீரில்
இன்னும் பரிசுத்தமாகிறது
என் காதல் ..//

நவாஸ்,

ம்ம்ம்...!

இளமை வழிகிறது கவிதையில்...!
(என் தங்கச்சிக்கு தெரியுமா இந்த கவிதை சமாச்சாரம்?)

வாங்க மக்கா. ஆமான்னுதான் தலைப்பிலேயே சொல்லிட்டேனே.

thiyaa said...

ஆகா அருமை

S.A. நவாஸுதீன் said...

//// தியாவின் பேனா said...
ஆகா அருமை////

வாங்க தியா. ரொம்ப நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

//நேற்றைய
கடைசி முத்தமும்
இன்றைய
முதல் முத்தமும்
சந்திக்கும்வரை
கட்டியவள் நீ
கட்டிவிட்ட கைக்கடிகாரம்
சொல்லாமல் சொன்னது
நொடிக்கொருதரம்
இறக்கவும்
பிறக்கவும்
காதல் போதுமென்று//


வரிகளில் விளையாடிட்டிங்க போங்க....

S.A. நவாஸுதீன் said...

///Sangkavi said...

வரிகளில் விளையாடிட்டிங்க போங்க....

ரொம்ப நன்றி நண்பா

Paleo God said...

//பைங்கிளியே
பாரிஜாதமே
என்றேன்
பைத்தியமென்கிறாய்
போடி என்றேன்
பைத்தியமாகிறாய்//

அப்ப்பா... காதலை எப்படியெல்லாம் சொல்ல முடிகிறது... மிக அருமை..::))

S.A. நவாஸுதீன் said...

///பலா பட்டறை said...
அப்ப்பா... காதலை எப்படியெல்லாம் சொல்ல முடிகிறது... மிக அருமை..::))///

வாங்க பலா பட்டறை. ரொம்ப நன்றியும் சந்தோசமும்.

பின்னோக்கி said...

எளிமையான வார்த்தைகளால் புரியும்படியான ஒரு அழகான கவிதை.

போடி என்ற சின்ன சொல்லுக்கு உண்டான சக்தி மகத்தானது என புரிய வைத்துவிட்டீர்கள். (யாரும் திட்டுனா என்ன பண்றது ? நீங்க தான் கூப்பிட சொன்னீங்கன்னு சொல்லிடட்டுமா ?)

S.A. நவாஸுதீன் said...

///பின்னோக்கி said...
எளிமையான வார்த்தைகளால் புரியும்படியான ஒரு அழகான கவிதை.

போடி என்ற சின்ன சொல்லுக்கு உண்டான சக்தி மகத்தானது என புரிய வைத்துவிட்டீர்கள். ///

வாங்க பின்னோக்கி. ரொம்ப நன்றி.

///(யாரும் திட்டுனா என்ன பண்றது ? நீங்க தான் கூப்பிட சொன்னீங்கன்னு சொல்லிடட்டுமா?)///

கம்பெனி பொறுப்பல்லன்னு போட மறந்துட்டேன்

kovai sathish said...

puthiya konatthil....?!

S.A. நவாஸுதீன் said...

////Sathish said...
puthiya konatthil....?!////

வாங்க சதீஷ். சும்மா ஒரு முயற்சிதான். ரொம்ப நன்றி.

thendralsaravanan said...

அற்புதமான காதல்!தமிழ் இப்படி மிரட்டியே வேலை வாங்குதா!!!