
முதல் கடிதம்
வெள்ளை காகிதம், பல வண்ணங்களில் அடிக்கோடிட்டு காட்ட மூவிரண்டு பேனாக்கள், மனதில் ஆயிரம் எண்ணங்கள், வரிசையாய் கோர்த்து வைத்த வார்த்தைகள், பல சமயங்களில் படித்த மேதாவித்தனம் நிறைந்த பல வாசகங்கள், எல்லாம் தயார்.
ஆனால் தொடங்குவது எப்படி, மை டியர் என்றா? பிரியமுள்ள என்றா? அன்புள்ள என்றா?, எத்தனை வார்த்தைகள் கிடைத்தாலும் அவை போதாது போல் தோன்றியது. என்னுயிர் ............, என்றபோது தொண்டைக்குள் உயிர் உருண்டு ஓடுகிறது. தொடக்கமே உனக்கு எதிர்பாராதது போல தோன்றுமோ என்ற அச்சம் வர அடுத்த காகிதம் அவசரமாய் வருகிறது.
மீண்டும் யோசிக்கிறேன். நான் செய்வது முறையா? தவறு என்று பல குரல்கள், பல பக்கம் இருந்து வந்தாலும், ஒரு குரல் உள்ளே இருந்து வருகிறது, வந்தது உன் தவறில்லை, காதலின் தவறு என்று.
அதனால் தவறு என்னுடையது இல்லை,
உன்னை காணும்போது என் செயல்களும்,
பேசும்போது தடுமாற்றமும்,
என்னை ஊடகமாய் பயன்படுத்தி
என் இதயம் உனக்கு புரியவைக்க,
மூளையிடம் பெற்ற பரஸ்பர உதவிகள்.
இதில் என் தவறில்லை.
இருவரும் விழிக்கடலில் விட்ட காதல்கப்பல், இதயத்துறைமுகத்தை அடைந்தும் அதை சொல்லமுடியாமல் அவதிப்பட்டோம்.

இறுதியில், எழுதிய அனைத்தும் எனக்குள் கலக்கத்தை தந்தாலும் இது நிதர்சனமான உண்மை என்று புரிந்ததால் பத்திரமாக மடித்து பாங்கோடு அதை, தேடி அலைந்து வாங்கிய அழகிய வண்ணக்கவரில் இட்டேன்.
விசித்திரம் என்னவென்றால் அது இன்னும் என்னிடத்தில் பத்திரமாய்